நன்றொன்று உண்டென்று

Jul 25, 2026,03:03 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நன்றொன்று உண்டென்று 

நான் எழுதுகிறேன் 

கவிதை! 


பிறர் மகிழ்வர் மனம் குளிர்வர் 

என்றெண்ணி நடுகிறேன் 

மரக்கன்றை! 


பிறர் புசிப்பர்! பசி மறப்பர் 

என்றெண்ணிக் கொடுக்கிறேன் 

என்னால் இயன்றதை! 


பிறர் வருத்தம் நீங்க 

அவர் கண்ணீர் துடைக்க 

நீள்கிறது என் விரல்கள்!




பிறர் கஷ்டம் தீர 

அவர்கள் கவலைகளைக்

காது கொடுத்துக் கேட்கிறேன்!


பணம் கொடுக்க முடியாவிட்டாலும்

ஆதரவு வார்த்தைகள்

உதிர்க்கிறேன்!


அனைவரையும் 

உறவினராய் நண்பர்களாய்ப்

பார்க்கிறேன்! 


எல்லோரும் கடவுளின் 

குழந்தைகள் என நினைத்து 

அனைவரையும் நேசிக்கிறேன்! 


போரில்லா உலகு கொடு என 

அந்த இணையில்லா ஈசனை 

யாசிக்கிறேன்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்