- ஸ்வர்ணலட்சுமி
ஸ்ரீ கால பைரவர் வழிபாடு: மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி 2025 பிப்ரவரி 20 வியாழன் அன்று காலை 7:30 மணி முதல் வெள்ளி பிப்ரவரி 21, 9: 04 வரை அஷ்டமி திதி உள்ளது. இந்நாளில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம்.
அஷ்ட பைரவர் போற்றி:
ஓம் கால பைரவா போற்றி
ஓம் கல்பாந்த பைரவா போற்றி
ஓம் குரோத பைரவா போற்றி
ஓம் கபால பைரவா போற்றி
ஓம் சம்ஹார பைரவா போற்றி
ஓம் உன்மத்த பைரவா போற்றி
ஓம் கண்ட பைரவா போற்றி
ஓம் உக்கிர பைரவா போற்றி
ஸ்ரீ கால பைரவர்:

*சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று பைரவர் வடிவம்.
*காலபைரவர் சிவனின் ருத்ர ரூபமாக இருப்பவர்.
*கபாலத்தை கையில் ஏந்தியவர் .காதுகளில் அழகிய குண்டலங்களை தரித்திருப்பவர்.
*காலபைரவர் கருமை நிறம் உடையவர்.
*சர்ப்பத்தை பூணூலாகக் கொண்டவர்.
*இடையூறுகளை மாய்த்து தம் பக்தர்க்கு இன்பம் அளிப்பவர்.
*பன்னிரு கைகளுடன், சந்திரனை தலையில் வைத்தும் ,சூலாயுதம், பாச கயிறு ,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாய் காட்சி தருபவர்.
தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபடுவது சிறப்பு. ஆலயங்களில் வடைமாலையை பைரவருக்கு சாத்தி வழிபடுவர் .வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர்.
பண பிரச்சினை, கடன் தீர, வறுமை நீங்க, திருமணத்தடை நீங்க, செல்வம் தங்க ,நிறைய பணம் சேர ,வியாபாரம் முன்னேற்றம் ,தொழில் முன்னேற்றம் ,தீராத நோய்கள் தீர, பயம் அகல, அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க மேலும் எந்தவித பிரச்சினைகள் இருந்தாலும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு செய்வதால் பக்தர்களை எட்டு திசைகளில் இருந்தும் காத்து அருள்வார் காலபைரவர்.
சிவாலயங்களில் வீற்றிருக்கும் கால பைரவரை வழிபட்டு 108 ஸ்ரீ காலபைரவர் அஷ்டோத்திரம் படிக்க கவலைகள் அனைத்தும் கரைந்து போகும். தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு செய்து அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவோமாக.
மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
{{comments.comment}}