Sri Kala Bhairavar.. ஸ்ரீகால பைரவர் வழிபாடு.. எப்போது செய்யலாம்.. எப்படிச் செய்ய வேண்டும்?

Feb 20, 2025,11:10 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஸ்ரீ கால பைரவர் வழிபாடு: மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி 2025 பிப்ரவரி 20 வியாழன் அன்று காலை 7:30 மணி முதல் வெள்ளி பிப்ரவரி 21, 9: 04 வரை அஷ்டமி திதி உள்ளது. இந்நாளில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம்.


அஷ்ட பைரவர் போற்றி:


ஓம் கால பைரவா போற்றி

ஓம் கல்பாந்த பைரவா போற்றி

ஓம் குரோத பைரவா போற்றி

ஓம் கபால பைரவா போற்றி

ஓம் சம்ஹார பைரவா போற்றி

ஓம் உன்மத்த பைரவா போற்றி

ஓம் கண்ட பைரவா போற்றி

ஓம் உக்கிர பைரவா போற்றி


ஸ்ரீ கால பைரவர்:




*சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று பைரவர் வடிவம்.

*காலபைரவர் சிவனின் ருத்ர ரூபமாக இருப்பவர்.

*கபாலத்தை கையில் ஏந்தியவர் .காதுகளில் அழகிய குண்டலங்களை  தரித்திருப்பவர்.

*காலபைரவர் கருமை நிறம் உடையவர்.

*சர்ப்பத்தை பூணூலாகக் கொண்டவர்.

*இடையூறுகளை மாய்த்து தம் பக்தர்க்கு இன்பம் அளிப்பவர்.

*பன்னிரு கைகளுடன், சந்திரனை தலையில் வைத்தும் ,சூலாயுதம், பாச கயிறு ,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாய் காட்சி தருபவர்.


தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபடுவது சிறப்பு. ஆலயங்களில் வடைமாலையை பைரவருக்கு சாத்தி வழிபடுவர் .வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர்.


பண பிரச்சினை, கடன் தீர, வறுமை நீங்க, திருமணத்தடை நீங்க, செல்வம் தங்க ,நிறைய பணம் சேர ,வியாபாரம் முன்னேற்றம் ,தொழில் முன்னேற்றம் ,தீராத நோய்கள் தீர, பயம் அகல, அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க மேலும் எந்தவித பிரச்சினைகள் இருந்தாலும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு செய்வதால் பக்தர்களை எட்டு திசைகளில் இருந்தும் காத்து அருள்வார் காலபைரவர்.


சிவாலயங்களில் வீற்றிருக்கும் கால பைரவரை வழிபட்டு 108 ஸ்ரீ காலபைரவர் அஷ்டோத்திரம் படிக்க கவலைகள் அனைத்தும் கரைந்து போகும். தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு செய்து அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவோமாக.


மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் நன்றி சொல்வோம்.. A day to thank nature and farmers

news

பூவரசு இலை பூரணக் கொழுக்கட்டை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 2)

news

ஒரே தூக்கு.. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் அசத்திய அகஸ்தீஸ்வரம் ஆசிரியர்!

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்