Sri Kala Bhairavar.. ஸ்ரீகால பைரவர் வழிபாடு.. எப்போது செய்யலாம்.. எப்படிச் செய்ய வேண்டும்?

Feb 20, 2025,11:10 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஸ்ரீ கால பைரவர் வழிபாடு: மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி 2025 பிப்ரவரி 20 வியாழன் அன்று காலை 7:30 மணி முதல் வெள்ளி பிப்ரவரி 21, 9: 04 வரை அஷ்டமி திதி உள்ளது. இந்நாளில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும் என்பது ஐதீகம்.


அஷ்ட பைரவர் போற்றி:


ஓம் கால பைரவா போற்றி

ஓம் கல்பாந்த பைரவா போற்றி

ஓம் குரோத பைரவா போற்றி

ஓம் கபால பைரவா போற்றி

ஓம் சம்ஹார பைரவா போற்றி

ஓம் உன்மத்த பைரவா போற்றி

ஓம் கண்ட பைரவா போற்றி

ஓம் உக்கிர பைரவா போற்றி


ஸ்ரீ கால பைரவர்:




*சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒன்று பைரவர் வடிவம்.

*காலபைரவர் சிவனின் ருத்ர ரூபமாக இருப்பவர்.

*கபாலத்தை கையில் ஏந்தியவர் .காதுகளில் அழகிய குண்டலங்களை  தரித்திருப்பவர்.

*காலபைரவர் கருமை நிறம் உடையவர்.

*சர்ப்பத்தை பூணூலாகக் கொண்டவர்.

*இடையூறுகளை மாய்த்து தம் பக்தர்க்கு இன்பம் அளிப்பவர்.

*பன்னிரு கைகளுடன், சந்திரனை தலையில் வைத்தும் ,சூலாயுதம், பாச கயிறு ,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் நிர்வாண ரூபமாய் காட்சி தருபவர்.


தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபடுவது சிறப்பு. ஆலயங்களில் வடைமாலையை பைரவருக்கு சாத்தி வழிபடுவர் .வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வர்.


பண பிரச்சினை, கடன் தீர, வறுமை நீங்க, திருமணத்தடை நீங்க, செல்வம் தங்க ,நிறைய பணம் சேர ,வியாபாரம் முன்னேற்றம் ,தொழில் முன்னேற்றம் ,தீராத நோய்கள் தீர, பயம் அகல, அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க மேலும் எந்தவித பிரச்சினைகள் இருந்தாலும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு செய்வதால் பக்தர்களை எட்டு திசைகளில் இருந்தும் காத்து அருள்வார் காலபைரவர்.


சிவாலயங்களில் வீற்றிருக்கும் கால பைரவரை வழிபட்டு 108 ஸ்ரீ காலபைரவர் அஷ்டோத்திரம் படிக்க கவலைகள் அனைத்தும் கரைந்து போகும். தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவர் வழிபாடு செய்து அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவோமாக.


மேலும் ஆன்மீக தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்