வாரணாசி: காசி (வாரணாசி) என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அங்கு பாயும் கங்கை நதியும், சாதுக்களும்தான்.. ஆனால் இனி கிரிக்கெட்டும் நினைவுக்கு வரும். பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் பிரமாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாகவுள்ளது.
ரூ. 330 கோடி செலவில் வாரணாசியில் கட்டப்படவுள்ள அதி நவீன கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வாரணாசியில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாரணாசி கிரிக்கெட் ஸ்டேடியத்துக்காக ரூ. 121 கோடி செலவில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு இந்த நிலத்தை வாங்கியுள்ளது. கட்டுமானப் பணிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும். கிட்டத்தட்ட 30,000 பேர் வரை அமரும் வகையில் இந்த ஸ்டேடியம் அமையவுள்ளது
வாரணாசியின் ரஜதலாப் பகுதியில், ரிங் ரோடு அருகே இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் வரவுள்ளது. 2025ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கட்டுமானப் பணிகள் முடிந்து ஸ்டேடியம் தயாராகி விடும். உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமையவுள்ள 3வது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இது. ஏற்கனவே கான்பூர் மற்றும் லக்னோவில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிவ பெருமானின் அடையாளங்கள்
இந்த ஸ்டேடியம் சிவபெருமானின் அடையாளங்கள் பலவற்றைத் தாங்கி உருவாகவுள்ளது. அதாவது ஸ்டேடியத்தின் நுழைவாயில் பிரமாண்ட உடுக்கை வடிவில் அமைக்கப்படவுள்ளது. உடுக்கை என்பது சிவபெருமானின் முக்கிய அடையாளம்.
அதேபோல பிரமாண்ட விளக்குக் கம்பங்கள் சூலாயுதம் போன்ற வடிவில் கட்டப்படவுள்ளன. இந்த சூலாயுத வடிவ விளக்குக் கம்பங்கள் சிவபெருமானின் இன்னொரு அடையாளத்தை நினைவுபடுத்தும் என்று நம்பப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பேசும்போது கூட இது சிவபெருமானின் தலத்தில் உருவாகும் ஸ்டேடியம் என்பதால் இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
TVK wins: தவெகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு என்ன காரணம்?
வெற்றியை நிர்ணயிக்க போகும் 119 தொகுதிகள்...நொடிக்கு நொடி மாறும் முன்னிலை
CM MK Stalin: மு.க.ஸ்டாலின் இல்லாத தமிழ்நாடு சட்டசபை.. பெரும் வேதனையில் திமுக!
பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக.. கஷ்டப்பட்டு கூட்டணி சேர்ந்தும் பலனில்லையே!
போராடும் அதிமுக-திமுக: சீனியர்களின் தோல்விக்கு SIR காரணமா?
இட்டுனு வந்து இட்டுனு போறது கஷ்டம்.. தி.நகர் தொகுதியில் திரில் வெற்றியைப் பெற்ற புஸ்ஸி ஆனந்த்!
தவெக அரசுக்கு முதல் கோரிக்கை.. கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் கட்டாயமாக்க கோரிக்கை!
Time to Lead: இனி அரசியல் மாறும்.. தலைவர்கள் மாறுவார்கள்.. விஜய் போட்ட புதிய பாதை!
ஜஸ்ட் மிஸ் ஆனாரா எடப்பாடி பழனிச்சாமி?.. விஜய் ஆதரவு சுயேச்சை வாங்கிய ஓட்டுக்களைப் பாருங்க!
{{comments.comment}}