சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

Dec 11, 2025,05:40 PM IST

சென்னை: பாமக நடத்தக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்திற்கு தவெகவிற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பாக வழக்கறிஞர் பாலு, தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் அழைப்பு கடிதம் வழங்கியுள்ளார்.


தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் பாமக தரப்பில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தவெகவிற்கு  அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை அன்புமணி சார்பில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக கட்சியினர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.


இந்த கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வழக்கறிஞர் பாலு பேசுகையில்,  தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று செல்லக்கூடிய அமைப்பாக இது இருக்கின்றது. திராவிட இயக்கத்திற்கு எல்லாம் இன்றைக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் இவருடைய கருத்து அமைந்துள்ளது. 




இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். திமுகவிற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்க வில்லை. காரணம் அவர்கள் எடுக்கக்கூடாது, எடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிக்கின்றவர்களை எழுப்ப முடியாது. திமுகவை தவிர திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்து இருக்கிறோம். அரசியல் கூட்டணி குறித்து எல்லாம் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்