சென்னை: பாமக நடத்தக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்திற்கு தவெகவிற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பாக வழக்கறிஞர் பாலு, தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் அழைப்பு கடிதம் வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் பாமக தரப்பில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க தவெகவிற்கு அன்புமணி கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தை அன்புமணி சார்பில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக கட்சியினர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
இந்த கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் ஆனந்தும் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து வழக்கறிஞர் பாலு பேசுகையில், தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என்று செல்லக்கூடிய அமைப்பாக இது இருக்கின்றது. திராவிட இயக்கத்திற்கு எல்லாம் இன்றைக்கு பாடம் சொல்லக்கூடிய வகையில் இவருடைய கருத்து அமைந்துள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். திமுகவிற்கு மட்டும் நாங்கள் அழைப்பு விடுக்க வில்லை. காரணம் அவர்கள் எடுக்கக்கூடாது, எடுக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிக்கின்றவர்களை எழுப்ப முடியாது. திமுகவை தவிர திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்து இருக்கிறோம். அரசியல் கூட்டணி குறித்து எல்லாம் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி
ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!
உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்
டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி
{{comments.comment}}