எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

Dec 09, 2025,05:06 PM IST

சென்னை: தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுர தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்ட ஆவணத்தில் எனது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. எனது பெயரையோ, படத்தையோ பயன்படுத்தக் கூடாது. வேண்டும் என்றால் அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம்.


தேர்தல் ஆணையத்தை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடுத்திருந்தோம். ஆனால், தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வாதிட்டார்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள். என் கட்சி எனக்கு இல்லை என்று சொல்வதற்கு ஒரு பிள்ளை. சொந்த தந்தையையே எதிர்க்கின்ற இப்படிப்பட்ட ஒரு தலைவர் தமிழ்நாட்டில் பிறந்துள்ளாரே என்று பேசிக்கொண்டுள்ளனர்.




தேர்தல் ஆணையத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தினோம். இப்போது தீர்ப்பும் எங்களுக்கு சாதமாக வந்துள்ளது. பாமகவை உருவாக்கியது நான் தான். கட்சியின் பெயரை சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒட்டு கேட்கும் கருவி வைத்தது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தோம். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது. நான் உருவாக்கிய பாமகவை அன்புமணி உள்ளிட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்