கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

Mar 10, 2026,05:21 PM IST

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அனுப்பிய சம்மன் குறித்து எழுந்துள்ள பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விளக்கத்தை அளித்துள்ளார். வரும் மார்ச் 17-ஆம் தேதி சி.பி.ஐ முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு :


கடந்த சில தினங்களாக, சி.பி.ஐ அனுப்பிய சம்மன் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் முரணான தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, சில ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.


மார்ச் 17-ல் ஆஜர் :




இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, "வருகின்ற மார்ச் 17-ஆம் தேதி அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனின் அடிப்படையில், விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


பின்னணி என்ன?


கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாகவே தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த நேரடி விளக்கம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இதே வழக்கில் விசாரைணக்கு ஆஜராகும் படி தவெக தலைவர் விஜய்க்கு நேற்று மூன்றாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.


சட்டப் போராட்டம் : 

சமீபகாலமாகப் பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் செந்தில் பாலாஜி, சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையையும் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க உள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது மார்ச் 17-ஆம் தேதிக்குப் பின் தெரியவரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்