சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அனுப்பிய சம்மன் குறித்து எழுந்துள்ள பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது விளக்கத்தை அளித்துள்ளார். வரும் மார்ச் 17-ஆம் தேதி சி.பி.ஐ முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகச் செய்திகளுக்கு மறுப்பு :
கடந்த சில தினங்களாக, சி.பி.ஐ அனுப்பிய சம்மன் தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் முரணான தகவல்கள் வெளியாகி வந்தன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, சில ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 17-ல் ஆஜர் :

இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, "வருகின்ற மார்ச் 17-ஆம் தேதி அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனின் அடிப்படையில், விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை (CBI) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாகவே தற்போது அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கில் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் இந்த நேரடி விளக்கம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இதே வழக்கில் விசாரைணக்கு ஆஜராகும் படி தவெக தலைவர் விஜய்க்கு நேற்று மூன்றாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப் போராட்டம் :
சமீபகாலமாகப் பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் செந்தில் பாலாஜி, சி.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையையும் சட்ட ரீதியாகவே எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க உள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது மார்ச் 17-ஆம் தேதிக்குப் பின் தெரியவரும்.
தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?
ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT
அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!
கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell
சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
{{comments.comment}}