சென்னை: பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.
பாமகவில் கடந்த சில காலமாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இது விரைவில் சரியாகிவிடும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் கூறிவந்தாலும், பிரச்சனை தற்போது பெரிதாகிக்கொண்டே தான் வருகிறது. இதனால் பாமக தொண்டர்களும் வருத்தமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாசும், அன்புமணியும் அமைதியாக இருந்து வந்த நிலையில், பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.
இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவை பலப்படுத்தும் வகையில் அன்புமணி ராமதாஸ் புதிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். அதன்படி, ராமதாஸ் பிறந்தநாளையொட்டி சென்னையை அடுத்த திருப்போரூரில் அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். நாளை திருப்போரூரில் இந்த பயணம் தொடங்க உள்ளது.

இந்நிலையில், இன்றுதைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் பேசுகையில், சிறப்பு பொதுக்குழுவின் படி பாமக செயல்தலைவராக அன்புமணி தொடர்வார். தன்னை தலைவர் எனக் கூறிக்கொண்டால் நடவடிக்கை பாயும். நடைப்பயணத்தின் போது பாமக கொடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணியின் நடை பயணத்திற்கு தடை விதிக்கக்கோரி டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாமக தலைமையகம் தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. பாமகவிற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. தொண்டர்களும், நிர்வாகிகளும் இனி வேறெங்கும் செல்ல வேண்டாம்.
ஒட்டுக்கேட்பு கருவி இங்கிலாந்து அல்லது பெங்களூரிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம். ஏன் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தார்கள், யார் வைத்தார்கள் என எனக்குத் தெரியும். அதை நான் அடுத்த வாரம் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
{{comments.comment}}