சென்னை: ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது... என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன... என உதயம் திரையங்கு மூடப்படுவதற்கு வைரமுத்து வருத்தத்துடன் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்று உதயம் தியேட்டர். உதயம் வளாகத்தில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகள் இயங்கி வந்தன. கடந்த 41 ஆண்டுகளாக இந்த திரையரங்கம் செயல்பட்டு வந்தது. நடுத்தர குடும்பங்களுக்கே உரிய திரையரங்கு என்றால் அது உதயம் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகி இருந்த ஒரு அரங்கு. குறைந்த விலையில் இங்கு டிக்கெட் விற்கப்பட்டதுடன், இடைவெளிக்கான ஸ்னாக்ஸ்சும் தரமாக குறைந்த விலைக்கு கிடைக்கும் என்பது இதன் சிறப்பு.
முக்கிய திரை நட்சத்திரங்களின் படங்கள் இங்கு ஏராளமாக வெளியிடப்பட்டு, ரசிகளின் விசில் சத்தமும் அதிகம் இடம் பெற்ற இடம் இது. இன்றைய நவீன கால வளர்ச்சியின் காரணமாக அதிகளவில் இங்கு யாரும் வராததினால் இத் திரையங்கம் மூடப்படுகிறது. இதை ரசிகர்களால் தங்கிக் கொள்ள முடியவில்லை என்று பலர் தங்களின் மனக்குமுறல்களை வெளிபடுத்தி வருகின்ற வேலையில், ஒரு திரைக் கலைஞனும் தாங்கிக் கொள்ள முடியாமல் குமுறி வருகின்றார். அவர் தான் வைரமுத்து. உதயம் திரை வளாகம் மூடப்படுவது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு
எதுவும் தப்ப முடியாது என்று
மூளை முன்மொழிவதை
இதயம் வழிமொழிய மறுக்கிறது
இனி
அந்தக் காலத் தடயத்தைக்
கடக்கும் போதெல்லாம்
வாழ்ந்த வீட்டை விற்றவனின்
பரம்பரைக் கவலையோடு
என் கார் நகரும்
நன்றி உதயம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}