காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

Apr 16, 2025,06:49 PM IST

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளின் ஈடுபாடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக கல்வித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.




வரும் கல்வி ஆண்டில் இத்திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக, சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்ட வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்