சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளின் ஈடுபாடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக கல்வித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் இத்திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக, சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்ட வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 08, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்
முருகனுக்கு பெருமை சேர்த்தது திமுக ஆட்சி: அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
{{comments.comment}}