காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

Apr 16, 2025,06:49 PM IST

சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.


இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளின் ஈடுபாடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக கல்வித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.




வரும் கல்வி ஆண்டில் இத்திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக, சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்ட வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?

news

கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

அதிகம் பார்க்கும் செய்திகள்