சென்னை: வரும் கல்வியாண்டு முதல் அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கல் வழங்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும். அரிசி உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்தும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பாடு அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தால் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் வகுப்பறையில் குழந்தைகளின் ஈடுபாடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக கல்வித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் இத்திட்டத்தில் அரிசி உப்புமாவிற்கு பதிலாக, சாம்பாருடன் பொங்கல் வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளி சீருடைகள் தைக்க தையல் கூலி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எடை குறைவாக உள்ள 92 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர், குழந்தைகள் நல மையங்கள் எல்லாம் ஸ்மார்ட் மையங்களாக மாற்றப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்திற்கு இதுவரை 721 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் தோழி விடுதிகள் என்பதை இலக்காக வைத்து இந்த அரசு செயல்பட்ட வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}