கன்னியாகுமரியில் 3 நாள் முகாமிடுகிறார் பிரதமர் மோடி.. நாள் முழுக்க தியானம் செய்யவும் திட்டம்!

May 28, 2024,05:37 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டங்களாக இத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து விட்டது. கடைசிக் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


இந்நிலையில், வரும் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்கள் அவர் அங்கு தங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவு வரப் போகும் நேரத்தில் மோடியின் தமிழக வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




வரும் 30ம் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30,31,1 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். ஜூன் 1ம் தேதி தியானத்தை முடித்துக்கொண்டு அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் புறப்படும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் 7 கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அதில் கடைசிக் கட்ட வாக்குப் பதிவின்போது உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்று அங்கு தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மோடி என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்