கன்னியாகுமரியில் 3 நாள் முகாமிடுகிறார் பிரதமர் மோடி.. நாள் முழுக்க தியானம் செய்யவும் திட்டம்!

May 28, 2024,05:37 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கியது. மொத்தம் 7 கட்டங்களாக இத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் 6 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்து விட்டது. கடைசிக் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


இந்நிலையில், வரும் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 நாட்கள் அவர் அங்கு தங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் முடிவு வரப் போகும் நேரத்தில் மோடியின் தமிழக வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




வரும் 30ம் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். 30,31,1 ஆகிய மூன்று நாட்கள் விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். ஜூன் 1ம் தேதி தியானத்தை முடித்துக்கொண்டு அன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் புறப்படும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 மக்களவை தேர்தலிலும் 7 கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அதில் கடைசிக் கட்ட வாக்குப் பதிவின்போது உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு சென்று அங்கு தொடர்ந்து 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டிருந்தார் பிரதமர் மோடி என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

நவராத்திரி 2025.. 9 நாள் தசரா விழாவின் சிறப்புகள்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

news

சவரன் ரூ. 83,000த்தை நெறுங்கும் தங்கம்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

ஜிஎஸ்டி 2.0.. நவராத்திரியில் அமலுக்கு வந்த புதிய வரிவிகிதங்கள்.. எதெல்லாம் விலை குறையும்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 22, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்