சென்னை: ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அக்., 1, 2 ஆகிய இரண்டு தினங்களுக்கு அரசு விடுமுறை தினங்களாகும். அதன்பின்னர் அக்.,4,5 ஆகிய இரண்டு தினங்களும் சனி மற்றும் ஞாயிறு, இந்நாட்களும் விடுமுறை என்பதால், இடையில் இருந்த 3ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது.
அக்டோபர் 3ம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை நிலவும். இந்த தொடர் விடுமுறை காரணமாக தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவர்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. எற்கனவே பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பணியில் இருப்பவர்களுக்கும் விடுமுறை என்பதால், இந்த 5 நாட்கள் குடும்பத்துடன் இருப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!
அக்., 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது
விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!
மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்
தங்கம் விலை சவரன் 90,000த்தை நெருங்குகிறது... இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?
{{comments.comment}}