பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல்.. ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்!

May 23, 2025,02:47 PM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.


ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் திடீர் என கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.




மேலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு,  எல்லைக்கோடு அருகே உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து  டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான்  நடத்திய தாக்குதலை   வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்தனர். இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்ததாக ராணுவம் பெருமிதத்துடன் அறிவித்தது.


இதனால், அப்பகுதிகளில் போர் பதற்ற சூழ்நிலை உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இராணுவப் படையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. இரு நாடுகளும் சண்டையை நிறுத்த  ஒப்புக்கொண்டன. இதனால் இரு நாடுகளின் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தன.


இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.  இதற்கு முன்னர் ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீருக்கு ராகுல் காந்தி செல்வது இது இரண்டாவது முறையாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி

news

ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்

news

மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்

news

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

news

விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

news

திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!

news

எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்