டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ ட்ரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் திடீர் என கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் முகாமிட்டிருந்த ஒன்பது தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, எல்லைக்கோடு அருகே உள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை வான் பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்தனர். இதில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பஹல்காம் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுத்ததாக ராணுவம் பெருமிதத்துடன் அறிவித்தது.
இதனால், அப்பகுதிகளில் போர் பதற்ற சூழ்நிலை உச்சகட்டத்தை எட்டி இருந்தது. தொடர்ந்து 4 நாட்களாக குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இராணுவப் படையினர் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தது. இரு நாடுகளும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன. இதனால் இரு நாடுகளின் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இதற்கு முன்னர் ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு- காஷ்மீருக்கு ராகுல் காந்தி செல்வது இது இரண்டாவது முறையாகும்.
25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!
இன்றிரவு முதல் மழை அதிகரிக்கும்.. அடுத்த 10 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்..!
பொதுவெளிகளில் அறிக்கை வெளியிட.. நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்திக்கு ஹைகோர்ட் தடை
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு... விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
கோடை விடுமுறைக்கு பின்னர்... திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ம் தேதி திறப்பு!
அரபிக் கடலில்.. வலுப்பெற்றது.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை மையம் தகவல்!
வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்...பதவி விலகுகிறார் முகமது யூனுஸ்
2026 இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!
{{comments.comment}}