கனமழை எதிரொலி.. மதுரையில்.. காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!!

Nov 30, 2023,12:05 PM IST

- மஞ்சுளா தேவி


மதுரை: கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக மதுரையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, புயல் சின்னம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, மதுரையில் வைகை ஆற்றில் கரைகளைத் தொட்டபடி தண்ணீர் ஓடுகிறது. மேலும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்வதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது.


மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வருவதால், வண்டியூரில் உள்ள தெப்பக்குளமும் நிரம்பி சூப்பராக காட்சி தருகிறது. இதை வேடிக்கை பார்க்கவும் மக்கள் கூடுகிறார்கள். 




இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலுக்காக தினமும் 70 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் ஏழு பேர் பாதிக்கப்படுவதாகவும்,இதுவரை 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


கனமழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்களும், வைரஸ்களும் அதிகமாக பரவும். இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் எளிதாக பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல் வராமல் தடுக்க முன்கூட்டியே குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வெந்நீர், கசாயம் ,போன்றவற்றை பருகக் கொடுங்கள். மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை அப்புறப்படுத்துங்கள். இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் காய்ச்சல் பாதிப்பில் இருந்து விலக முடியும். காய்ச்சல் வராமல் தடுக்க விழிப்புணர்வுடன் செயல்படுங்கள் மக்களே..!!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்