குடையோடு போங்க.. சென்னை உள்பட 6 மாவட்டங்களில்.. அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

Jun 03, 2024,11:07 AM IST

சென்னை:   தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். ஆனால் நேற்று சென்னை, தேனி, திருப்பூர், உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. தஞ்சையில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முழுவதும் சேதமாகின.




திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஓசூரில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் தென்னை மரமே வேரோடு சாய்ந்து  மின் கம்பம் விழுந்து சேதம் ஆனது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.


நள்ளிரவில் சென்னையை நனைத்த மழை


சென்னையில், நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் ஆச்சரியமடைந்தனர். நங்கநல்லூர், தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் கன மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் செங்கம், வாழப்பாடி, குளித்தலை உள்ளிட்ட இடங்களிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. இப்படி தமிழ்நாட்டில் பரவலாக கோடை மழை பெய்து வெக்கை தணிந்து மக்களை மகிழ்வித்து வருகிறது.


அடுத்த 3 மணி நேரத்தில் மழை:


இந்த நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே வெயில் வாட்டிய எடுத்த நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் பகுதியில், அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்