உஷாரா இருங்க.. ஏமாந்துராதீங்க.. எங்க பேரைச் சொல்லி மோசடி நடக்குது.. ராஜ் கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

Sep 09, 2024,06:21 PM IST

சென்னை: எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்பது நடிகர் கமல்ஹாசனால் நிறுவப்பட்ட திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமாகும். ஹாசன் சகோதரர்கள் என்ற பெயரில் 1981ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல் படம் தயாரித்து வெளியிட்ட பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என இதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


ராஜ பார்வை, விக்ரம், ஹரே ராதா ஹரே கிருஷ்ணா, சத்யா, அபூர்வ சகோதரர்கள், குணா, தேவர் மகன், மகளிர் மட்டும், குருதிப்புனல், சதிலீலாவதி, காதலா காதலா, ஹே ராம், நளதமயந்தி, விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம், சில காலமாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்து வந்தது. தற்போது அமரன், சிம்பு 48, தக் லைஃப் உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறது. 




இந்நிலையில், ராஜ்கமல் நிறுவனத்தின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.


நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்