சென்னை: தமிழ்நாட்டில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
ரமலான் நோன்புக் காலம் கடந்த ஒரு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்றுடன் 30 நாட்களை நோன்புக்காலம் தொட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி அறிவித்துள்ளார்.

மார்ச் 2ம் தேதி தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்கி தற்போது பெருநாள் வந்துள்ளது. அதேசமயம், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியாவிலும் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் இன்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை என்று அறிவிக்கப்பட்டதால் நாளை பண்டிகையைக் கொண்டாடும் ஏற்பாடுகளில் இஸ்லாமியர்கள் இறங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை
{{comments.comment}}