ஷவ்வால் மாத பிறை தெரிந்தது.. தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் பெரு விழா.. தலைமை காஜியார் அறிவிப்பு

Mar 30, 2025,08:01 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.


ரமலான் நோன்புக் காலம் கடந்த ஒரு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்றுடன் 30 நாட்களை நோன்புக்காலம் தொட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி அறிவித்துள்ளார்.




மார்ச் 2ம் தேதி தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்கி தற்போது பெருநாள் வந்துள்ளது. அதேசமயம், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியாவிலும் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் இன்று கொண்டாடப்பட்டது.


தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை என்று அறிவிக்கப்பட்டதால் நாளை பண்டிகையைக் கொண்டாடும் ஏற்பாடுகளில் இஸ்லாமியர்கள் இறங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்