சென்னை: தமிழ்நாட்டில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார்.
ரமலான் நோன்புக் காலம் கடந்த ஒரு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இன்றுடன் 30 நாட்களை நோன்புக்காலம் தொட்டது. இந்த நிலையில் இன்று மாலையில் ஷவ்வால் மாத பிறப்பைக் குறிக்கும் பிறை தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார், டாக்டர் சலாஹுதீன் முகம்மது அயூப் அல் அஸாரி, அல் குவாதிரி அல் கஸ்நாசினி அறிவித்துள்ளார்.

மார்ச் 2ம் தேதி தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்கி தற்போது பெருநாள் வந்துள்ளது. அதேசமயம், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சவூதி அரேபியாவிலும் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. கேரளாவிலும் இன்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை என்று அறிவிக்கப்பட்டதால் நாளை பண்டிகையைக் கொண்டாடும் ஏற்பாடுகளில் இஸ்லாமியர்கள் இறங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி
சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலையின் ஹைக்கூ கவிதைகள்!
ஆலோலம் பாட்டுக் கேட்குதே
{{comments.comment}}