ஈரோடு: கூட்டத்தை பார்க்கும் போது நாளை தமிழகத்திவ் முதல்வர் விஜய் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. நாளை தமிழகத்தை ஆளப்போவது புரட்சி தளபதி விஜய் தான் என்று தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த கூட்டத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், பெரியார் பிறந்த மண்ணுக்கு தவெக தலைவர் விஜய் வருகைதந்துள்ளார். நாளைக்கு ஆட்சிக்கு வரப்போவது புரட்சி தளபதி தான்.

கூட்டத்தை பார்க்கும் போது நாளை தமிழகத்தின் முதல்வர் விஜய் தான் என வரலாறு படைக்கும் என்பது போல் உள்ளது. நல்ல தலைவர் வேண்டும் என்று மக்கள் பல நாள் கண்ட கனவு இன்று நிறைவேறியுள்ளது. விஜய் மனித நேயம் மிக்கவர், நல்லவர், வல்லவர், மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக வரலாற்றில் மக்களுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வந்தவர்களில் புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதி தான்.
234 தொகுதிகளிலும் விஜய் யாரை விரல் காட்டுகிறாரோ அவர் தான் தமிழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர். ஒரு ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வருவாயை விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற வந்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். என்னை பொறுத்தவரை இது தீர்ப்பளிக்கும் கூட்டம். இந்தக் கூட்டம் நாளைய தமிழகத்தின் வரலாற்றை படைக்கும் கூட்டம் என்று தெரிவித்துள்ளார்.
எந்த சின்னத்தில் போட்டி? திமுக-மக்கள் நீதி மய்யம் இடையே தொடரும் இழுபறி
கோடை விடுமுறை: 50 சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே
கிடைக்காதவற்றை நேசிக்காதே மனமே.. Dear feelings, Please stop!
சிரிப்பு வருதா.. சிரிங்க பாஸ்.. நல்லா வாய் விட்டு சிரிங்க.. உடம்புக்கு நல்லது!
உலகம் அப்படியேதான் இருக்கிறது.. No, The World Is Not broken
20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
எங்களுடன் ஒப்பிட்டு தொகுதி கேட்காதீங்க...செல்வ பெருந்தகை வேண்டுகோள்
ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது - நயினார் நாகேந்திரன் அதிரடி
5 தலைநகரங்கள், சாதியற்ற இட ஒதுக்கீடு" - நாம் தமிழர் தேர்தல் அறிக்கை 2026 ஐ வெளியிட்டார் சீமான்
{{comments.comment}}