நியூயார்க் : அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகனும், மூத்த பத்திரிகையாளருமான இஷான் தரூரும் தனது வேலையை இழந்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் 'வேர்ல்ட்வியூ' என்ற சர்வதேச அரசியல் குறித்த பகுதியை நடத்தி வந்த இஷான் தரூர், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இன்று வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்திலிருந்து நானும், சர்வதேச பிரிவைச் சேர்ந்த பல சக ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் விளையாட்டுப் பிரிவு, புத்தக விமர்சனப் பிரிவு மற்றும் பல சர்வதேச அலுவலகங்களை அந்த நிறுவனம் மூடியுள்ளது. மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக ஆசிரியர் மாட் முர்ரே தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ், நஷ்டத்தைக் குறைப்பதற்காக தனது 12 ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த கட்டுரையாளர் இஷான் தரூர் உட்பட நூற்றுக்கணக்கான திறமையான பத்திரிகையாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. இது ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் புகுந்து போராட முயன்றது ஏன்.. அறிவு விளக்கம்
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
{{comments.comment}}