நியூயார்க் : அமெரிக்காவின் முன்னணி நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகனும், மூத்த பத்திரிகையாளருமான இஷான் தரூரும் தனது வேலையை இழந்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2017-ஆம் ஆண்டு முதல் 'வேர்ல்ட்வியூ' என்ற சர்வதேச அரசியல் குறித்த பகுதியை நடத்தி வந்த இஷான் தரூர், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"இன்று வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்திலிருந்து நானும், சர்வதேச பிரிவைச் சேர்ந்த பல சக ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். இது மிகவும் மனவேதனை அளிக்கிறது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் விளையாட்டுப் பிரிவு, புத்தக விமர்சனப் பிரிவு மற்றும் பல சர்வதேச அலுவலகங்களை அந்த நிறுவனம் மூடியுள்ளது. மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக ஆசிரியர் மாட் முர்ரே தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்குச் சொந்தமான 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ், நஷ்டத்தைக் குறைப்பதற்காக தனது 12 ஆண்டு கால அனுபவம் கொண்ட மூத்த கட்டுரையாளர் இஷான் தரூர் உட்பட நூற்றுக்கணக்கான திறமையான பத்திரிகையாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. இது ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}