சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Dec 26, 2025,06:28 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் 'பராசக்தி'. இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், தான் உருவாக்கிய கதையை உரிய அனுமதியின்றி படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளதாகவும், இது அறிவுசார் சொத்துரிமையை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் உண்மைத் தன்மையை அறிய விரிவான விசாரணை அவசியம் எனத் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, 'பராசக்தி' படக்குழுவினர் மற்றும் மனுதாரர் என அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணை குறித்த முழுமையான அறிக்கையை வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் கதை திருட்டு புகார்கள் எழுவது வழக்கம். இருப்பினும், 'பராசக்தி' போன்ற ஒரு பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள படத்திற்கு, படத்தின் டைட்டில் முதல் கதை வரை சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைக்டரர் சுதா கொங்கரா இயக்கி உள்ள இந்த படம் ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இந்த சமயத்தில் படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் எழுந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜனவரி 2-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள அறிக்கையைப் பொறுத்தே, படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் வெளியீடு குறித்த தெளிவான முடிவு தெரிய வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்