டெல்லி: 2024 ஆம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இந்த சூரிய கிரகணம் நிகழும் போது 4 நிமிடங்கள் முதல் 27 வினாடிகள் பகல் பொழுது முழுமையாக இருளாக இருக்கும். ஆனால் இதை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதைப் பார்க்க முடியும்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் சந்திரன் ஒரு புள்ளியில் வரும். அப்போது சூரியனை மறைக்கும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதில் முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம் என பல வகைகள் உள்ளன.
இந்த ஆண்டில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாட்டில் மட்டுமே தெரியும். குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் 18 மாகாணங்களில் இந்த அரிய சூரிய கிரகணம் தென்படும். இந்த சூரிய கிரகணம் நிகழும் போது ஒரு சில பகுதிகளில் இருளாக காணப்படும்.
இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி, அதிகாலை 2.22 மணிக்கு முடிகிறது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் இரவு நேரத்தில் தொடங்கி அதிகாலையிலேயே முடிவடைவதால், இதனை நம்மால் காண முடியாது. மேலும் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாட்டில் இந்த சூரிய கிரகணம் பிற்பகல் 3:20 மணிக்கு தென்படும். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் இந்த சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை மெக்சிகோ பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிப்பவர்கள் தான் முதலில் காண்பர். இது மொத்தம் இரண்டரை மணி நேரம் நிகழும். கடந்த 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வருடம்தான் மிக நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்கிறது. 54 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த அரிய வகை சூரிய கிரகணம் நிகழ்வதால் இதனைக் காண மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
நாசாவின் அறிக்கைப்படி, முழு சூரிய கிரகணம் 4 நிமிடம் 27 வினாடிகள் வரை நீடிக்கும். சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியிலிருந்து சுமார் 2.23 லட்சம் மைக்கல் தொலைவில் காணப்படும். இந்த சூரிய கிரகணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நேரம் நிகழ்கிறது. அப்போது பூமி மீது முழுமையாக இருள் சூழ்ந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. ஏனெனில் அவ்வாறு பார்த்தால் கண்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு ஏதுவான கண்ணாடிகளை அணிந்து பார்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அலைகடல் போலே எழுந்திடு
குழந்தை.. ஒரு ஈர்ப்பு சக்தி!
ஆசானின் கருணை!
மறைந்தது தமிழ்நாட்டின் மண் வாசனை.. பாரதிராஜா!
தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம்.. நாளை கூடுகிறது
இயக்குனர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு.. நாளை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
பாஜகவிலிருந்து விலகினார் அமர் பிரசாத் ரெட்டி...தலைமை மீது பகீர் குற்றச்சாட்டு
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமர்.. நரேந்திர மோடி சாதனை.. உலகத் தலைவர்கள் வாழ்த்து!
Bharathiraja: The Director Who Gave Tamil Cinema Its Soil, Its Colour, and Its Soul
{{comments.comment}}