பெங்களூரு: எனது மனைவி நடிகை செளந்தர்யா குறித்தும், நடிகர் மோகன்பாபு குறித்தும் கடந்த சில நாட்களாக பொய்யான அவதூறு பரப்பப்படுகிறது. இதை முற்றாக நான் நிராகரிக்கிறேன் என்று நடிகை செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு கூறியுள்ளார்.
மறைந்த நடிகை செளந்தர்யாவின் சொத்தை நடிகர் மோகன்பாபு மிரட்டிக் கேட்டதாகவும், அதைக் கொடுக்க செளந்தர்யா மறுத்ததால், அவரை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க வைத்து மோகன்பாபு கொன்று விட்டதாகவும் சிட்டிமல்லு என்ற நபர் கம்மம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ். ரகு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து தொடர்பாக மோகன்பாபு குறித்தும், எனது மனைவி மறைந்த செளந்தர்யா குறித்தும் பொய்யான அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இவை எல்லாமே அடிப்படை இல்லாத அவதூறான பொய்யான செய்தி என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர் மோகன்பாபு, செளந்தர்யாவுக்குச் சொந்தமான எந்த சொத்தையும் வலுக்கட்டாயமாக பறிக்கவில்லை, வாங்கவில்லை.
மேலும் எனக்குத் தெரிந்தவரை மோகன்பாபுவுடன் எந்த சொத்துப் பரிமாற்றமும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கடந்த 25 வருடத்திற்கும் மேலாக எனக்கு மோகன்பாபுவைத் தெரியும். அவருடன் நல்ல நட்பு உள்ளது. எங்களது குடும்பங்கள், எனது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் மோகன்பாபுவுடன் நல்ல உறவையும், மரியாதையையும் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மோகன்பாபு சாரை நான் மதிக்கிறேன். எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. குடும்பமாக நாங்கள் பழகி வருகிறோம். எனவே மோகன்பாபு சாருடன், எங்களுக்கு எந்தவிதமான சொத்துப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே இந்த பொய்யான செய்தியை பரப்புவதை அனைவரும் நிறுத்த வேண்டும். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு கடந்து செல்லுமாறு அனைவைரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரகு.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}