பெங்களூரு: எனது மனைவி நடிகை செளந்தர்யா குறித்தும், நடிகர் மோகன்பாபு குறித்தும் கடந்த சில நாட்களாக பொய்யான அவதூறு பரப்பப்படுகிறது. இதை முற்றாக நான் நிராகரிக்கிறேன் என்று நடிகை செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு கூறியுள்ளார்.
மறைந்த நடிகை செளந்தர்யாவின் சொத்தை நடிகர் மோகன்பாபு மிரட்டிக் கேட்டதாகவும், அதைக் கொடுக்க செளந்தர்யா மறுத்ததால், அவரை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க வைத்து மோகன்பாபு கொன்று விட்டதாகவும் சிட்டிமல்லு என்ற நபர் கம்மம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ். ரகு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து தொடர்பாக மோகன்பாபு குறித்தும், எனது மனைவி மறைந்த செளந்தர்யா குறித்தும் பொய்யான அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இவை எல்லாமே அடிப்படை இல்லாத அவதூறான பொய்யான செய்தி என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர் மோகன்பாபு, செளந்தர்யாவுக்குச் சொந்தமான எந்த சொத்தையும் வலுக்கட்டாயமாக பறிக்கவில்லை, வாங்கவில்லை.
மேலும் எனக்குத் தெரிந்தவரை மோகன்பாபுவுடன் எந்த சொத்துப் பரிமாற்றமும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கடந்த 25 வருடத்திற்கும் மேலாக எனக்கு மோகன்பாபுவைத் தெரியும். அவருடன் நல்ல நட்பு உள்ளது. எங்களது குடும்பங்கள், எனது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் மோகன்பாபுவுடன் நல்ல உறவையும், மரியாதையையும் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மோகன்பாபு சாரை நான் மதிக்கிறேன். எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. குடும்பமாக நாங்கள் பழகி வருகிறோம். எனவே மோகன்பாபு சாருடன், எங்களுக்கு எந்தவிதமான சொத்துப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே இந்த பொய்யான செய்தியை பரப்புவதை அனைவரும் நிறுத்த வேண்டும். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு கடந்து செல்லுமாறு அனைவைரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரகு.
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}