பெங்களூரு: எனது மனைவி நடிகை செளந்தர்யா குறித்தும், நடிகர் மோகன்பாபு குறித்தும் கடந்த சில நாட்களாக பொய்யான அவதூறு பரப்பப்படுகிறது. இதை முற்றாக நான் நிராகரிக்கிறேன் என்று நடிகை செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு கூறியுள்ளார்.
மறைந்த நடிகை செளந்தர்யாவின் சொத்தை நடிகர் மோகன்பாபு மிரட்டிக் கேட்டதாகவும், அதைக் கொடுக்க செளந்தர்யா மறுத்ததால், அவரை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க வைத்து மோகன்பாபு கொன்று விட்டதாகவும் சிட்டிமல்லு என்ற நபர் கம்மம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ். ரகு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து தொடர்பாக மோகன்பாபு குறித்தும், எனது மனைவி மறைந்த செளந்தர்யா குறித்தும் பொய்யான அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இவை எல்லாமே அடிப்படை இல்லாத அவதூறான பொய்யான செய்தி என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர் மோகன்பாபு, செளந்தர்யாவுக்குச் சொந்தமான எந்த சொத்தையும் வலுக்கட்டாயமாக பறிக்கவில்லை, வாங்கவில்லை.
மேலும் எனக்குத் தெரிந்தவரை மோகன்பாபுவுடன் எந்த சொத்துப் பரிமாற்றமும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கடந்த 25 வருடத்திற்கும் மேலாக எனக்கு மோகன்பாபுவைத் தெரியும். அவருடன் நல்ல நட்பு உள்ளது. எங்களது குடும்பங்கள், எனது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் மோகன்பாபுவுடன் நல்ல உறவையும், மரியாதையையும் கொண்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மோகன்பாபு சாரை நான் மதிக்கிறேன். எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. குடும்பமாக நாங்கள் பழகி வருகிறோம். எனவே மோகன்பாபு சாருடன், எங்களுக்கு எந்தவிதமான சொத்துப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனவே இந்த பொய்யான செய்தியை பரப்புவதை அனைவரும் நிறுத்த வேண்டும். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு கடந்து செல்லுமாறு அனைவைரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரகு.
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
{{comments.comment}}