எல்லாமே பொய்.. மோகன்பாபு மீதான புகார்களை முற்றாக நிராகரிக்கிறேன்.. செளந்தர்யா கணவர் விளக்கம்!

Mar 12, 2025,06:45 PM IST

பெங்களூரு: எனது மனைவி நடிகை செளந்தர்யா குறித்தும், நடிகர் மோகன்பாபு குறித்தும் கடந்த சில நாட்களாக பொய்யான அவதூறு பரப்பப்படுகிறது. இதை முற்றாக நான் நிராகரிக்கிறேன் என்று நடிகை செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ்.ரகு கூறியுள்ளார்.


மறைந்த நடிகை செளந்தர்யாவின் சொத்தை நடிகர் மோகன்பாபு மிரட்டிக் கேட்டதாகவும், அதைக் கொடுக்க செளந்தர்யா மறுத்ததால், அவரை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்க வைத்து மோகன்பாபு கொன்று விட்டதாகவும் சிட்டிமல்லு என்ற நபர் கம்மம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செளந்தர்யாவின் கணவர் ஜி.எஸ். ரகு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள சொத்து தொடர்பாக மோகன்பாபு குறித்தும், எனது மனைவி மறைந்த செளந்தர்யா குறித்தும் பொய்யான அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இவை எல்லாமே அடிப்படை இல்லாத அவதூறான பொய்யான செய்தி என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நடிகர் மோகன்பாபு, செளந்தர்யாவுக்குச் சொந்தமான எந்த சொத்தையும் வலுக்கட்டாயமாக பறிக்கவில்லை, வாங்கவில்லை.


மேலும் எனக்குத் தெரிந்தவரை மோகன்பாபுவுடன் எந்த சொத்துப் பரிமாற்றமும் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. கடந்த 25 வருடத்திற்கும் மேலாக எனக்கு மோகன்பாபுவைத் தெரியும். அவருடன் நல்ல நட்பு உள்ளது. எங்களது குடும்பங்கள், எனது மனைவி, மாமியார், மைத்துனர் ஆகியோர் மோகன்பாபுவுடன் நல்ல உறவையும், மரியாதையையும் கொண்டுள்ளனர்.


இந்த விவகாரத்தில் மோகன்பாபு சாரை நான் மதிக்கிறேன்.  எங்களுக்குள் நல்லுறவு உள்ளது. குடும்பமாக நாங்கள் பழகி வருகிறோம். எனவே மோகன்பாபு சாருடன், எங்களுக்கு எந்தவிதமான சொத்துப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


எனவே இந்த பொய்யான செய்தியை பரப்புவதை அனைவரும் நிறுத்த வேண்டும். இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு கடந்து செல்லுமாறு அனைவைரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ரகு.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்