சென்னை: தென் மேற்குப் பருவ மழைக்காலம் இன்று முதல் முடிவுக்கு வருகிறது. தென்மேற்கு மழை காலம் படிபடியாக குறைந்து அடுத்து வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக செப்டம்பர் 17ம் தேதியுடன் இந்த மழை முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு எட்டு நாட்கள் கழித்து இன்றுடன் விடை பெறுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் கூடுதலாகவே பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் 8 சதவிதத்திற்கும் அதிகமாக கூடுதல் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் கூடுதல் மழை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் தென் மேற்குப் பருவ மழை தற்போது விடை பெற்று விட்டது. இந்தியாவின் இதர பகுதிகளிலும் இது படிப்படியாக விடைபெறும்.
செப்டம்பர் 30ம் தேதியுடன் தென் மேற்குப் பருவ மழை நாடு முழுவதும் முடிவுக்கு வரும். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 3வது வாரத்தில் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}