தென் மேற்குப் பருவ மழை.. இன்றே கடைசி.. இன்று முதல் விடை பெறுகிறது!

Sep 25, 2023,04:16 PM IST

சென்னை: தென் மேற்குப் பருவ மழைக்காலம் இன்று முதல் முடிவுக்கு வருகிறது. தென்மேற்கு மழை காலம் படிபடியாக குறைந்து அடுத்து வட கிழக்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வழக்கமாக செப்டம்பர் 17ம் தேதியுடன் இந்த மழை முடிவடையும். ஆனால் இந்த ஆண்டு எட்டு நாட்கள் கழித்து இன்றுடன்  விடை பெறுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டில் கூடுதலாகவே பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக, சென்னையில் 8 சதவிதத்திற்கும் அதிகமாக  கூடுதல் மழை பெய்துள்ளது. 


தொடர்ந்து சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேலும் கூடுதல் மழை தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் தென் மேற்குப் பருவ மழை தற்போது விடை பெற்று விட்டது. இந்தியாவின் இதர பகுதிகளிலும் இது படிப்படியாக விடைபெறும். 


செப்டம்பர் 30ம் தேதியுடன் தென் மேற்குப் பருவ மழை நாடு முழுவதும் முடிவுக்கு வரும். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் 3வது வாரத்தில் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்