சென்னை: விடுமுறை கால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப பெரும் திரளாக மக்கள் ரயில் நிலையங்களில் கூடி வருகின்றனர். ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்று நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், மதுரையில் இருந்து இன்று இரவு 8. 50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் : 06184) திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக நாளை புதன்கிழமை காலை 6:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலின் வருகையால் சென்னை திரும்பும் பயணிகளிடையே மகிழ்ச்சி நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Sunday Surprise: இயற்கை அன்னையும் மனிதனும்!
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
{{comments.comment}}