சென்னை: விடுமுறை கால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப பெரும் திரளாக மக்கள் ரயில் நிலையங்களில் கூடி வருகின்றனர். ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்று நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், மதுரையில் இருந்து இன்று இரவு 8. 50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் : 06184) திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக நாளை புதன்கிழமை காலை 6:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலின் வருகையால் சென்னை திரும்பும் பயணிகளிடையே மகிழ்ச்சி நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}