சென்னை: விடுமுறை கால கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் மதுரை- தாம்பரம் இடையே இன்று இரவு 8.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப பெரும் திரளாக மக்கள் ரயில் நிலையங்களில் கூடி வருகின்றனர். ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் பொதுமக்களின் நலனுக்காக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி மதுரையில் இருந்து இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்று நாளை புதன்கிழமை காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மதுரை - தாம்பரம் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், மதுரையில் இருந்து இன்று இரவு 8. 50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் : 06184) திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக நாளை புதன்கிழமை காலை 6:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலின் வருகையால் சென்னை திரும்பும் பயணிகளிடையே மகிழ்ச்சி நிலவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}