போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!

Dec 26, 2025,06:28 PM IST

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தில், இன்று பெண் ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் போராட்டக் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வாளகத்தை முற்றுகையிட வந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், உடல்நலக்குறைவு காரணமாக நிலைகுலைந்து திடீரென மயங்கி விழுந்தார்.




ஆசிரியை மயங்கி விழுந்ததைக் கண்ட சக ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். உடனடியாகஅங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். காவல்துறையினர் மற்றும் சக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீண்ட நேரமாக உணவின்றி வெயிலில் நின்றதே அவர் மயங்கி விழுந்ததற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் பதற்றம் மேலும் அதிகரித்தது. "எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் வந்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம்" என ஆசிரியர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


ஆசிரியை மயங்கி விழுந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இந்த விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

news

மனிதம் மலர்கையில் .. (பகுதி 1)

news

என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? உயர்வா? குறைவா? இதோ முழு விபரம்!

news

இருந்தா மட்டும் போதும்.. I actually don't want anything from you!

news

அரசு விழாக்களில்.. தேசிய கீதத்திற்கு முன்பாக இனி வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்!

news

பிப்ரவரி 22-ம் தேதி முதல்.. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும்.. திமுக அறிவிப்பு

news

பகிரங்க கொலை மிரட்டல் .. தேமுதிக நிர்வாகியை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்