மாசிலா மனிதராய் வெற்றித்தடம் பதித்த புனிதர்.. அப்துல் கலாம்!

Jul 27, 2026,04:22 PM IST
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்

அன்னை பூமி ராமேஸ்வரமதில் வரமாய் அவதரித்தாய்!
ஆனந்த வாழ்வு எலாம் துறந்து தாய் மொழியில் கல்வி கற்று உயர்ந்தாய்!

இஸ்லாமிய மதத்தவரானாலும் ஏனைய மதத்தவரையும் நேசித்தாய்!
ஈடில்லா சுவாமி சிவானந்தா தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தாய்!

உன்னதமான விஞ்ஞானி ஆகக் கனவு கண்டிருந்தாய்!
ஊர் போற்ற ஏவுகனை நாயகனாய் பெயரெடுத்தாய்!

எத்தனையோ பதவி வகித்தும் மக்கள் ஜனாதிபதியாய் மனம் நிறைந்தாய்!
ஏற்றமுடன் அரசுப்பணியில் இருந்தும் எளிமையை கடைபிடித்தாய்!

ஐக்கிய நாடுகளும் நின் அறிவியல் திறன் பேசி வியக்க வைத்தாய்!
ஒரு மாமனிதராய் வாழ்ந்த காவியத்தை அக்னிச்சிறகுகளாய்த் தந்தாய்!





ஓராயிரம் அல்ல கோடானுகோடி மக்கள் மனதில் இடம் பிடித்தாய்!
ஒளடதமில்லா வாழ்வை  மேற்கொண்டு மண்ணைவிட்டு மறைந்தாய்!

அஃதே மனித நேயம் பசுமை பூமி என்று வித்திட்ட நீ இறந்தும் மக்கள் மனதில் நீங்கா( த) இடம் பிடித்தாய்!

கல்வியே நல் வாழ்வுக்கு வழி என போதித்தாய்!
சாமான்யனாய்ப் பிறந்து சரித்திரம் படைத்தாய்!
தமிழ் மண்ணின் மைந்தன் நின் பெருமையை உலகம் போற்றச் செய்தாய்!
முயற்சியும் பயிற்சியும் ஏற்றம் தரும் மந்திரம் எனப் பயிற்றுவித்தாய்!

அரச பதவியில் ஏகபோக வாழ்க்கை வாழ வழியிருந்தும் ஆடம்பரம் தவிர்த்தாய்!
மக்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போதே மண்ணில் விழுந்து மறைந்தாய்!
தாயிற்சிறந்த தயாவானவராய் எம் கண்ணில் கண்ணீரை வரவழைத்தாய்!

மாசிலா மனிதராய் வெற்றித்தடம் பதித்த புனிதர் நீ 
இன்னும் பல்லாண்டு வாழ்ந்திருக்கலாம்!!! 
பல்லாண்டு நீ வாழ்ந்திருக்கலாம்!!!

(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர். நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்