டெல்லி: நியூஸ்கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா கைது சட்டவிரோதமானது, என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவும் அது உத்தரவிட்டுள்ளது.
டெல்லி போலீஸாா் இவரை தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். அந்தக் கைதைத்தான் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
தன்னைக் கைது செய்ததை எதிர்த்து பிரபிர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, கைது செய்யப்பட்டது தொடர்பான நகலை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் அவரது கைது சட்டவிரோதமானது என்று வருகிறது. இந்த கைது சட்டவிரோதமாக நடந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அவரை சிறையில் அடைத்த உத்தரவும் செல்லாது என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரபிர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் பங்கஜ் பன்சால் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒருவரைக் கைது செய்தால், அவரைக் கைது செய்வது தொடர்பான உத்தரவை கைது செய்யப்பட்டவருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்தக் கைது செல்லாது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். அதே காரணத்தையே இந்த வழக்கிலும் சொல்லி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாத தடுப்பு மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் பிரபிர். சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக நியூஸ்கிளிக் நிறுவனம் பணம் பெற்றதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பிரபிரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் எச்ஆர் அதிகாரி அமித் சக்கவர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் அமித் அப்ரூவர் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}