டெல்லி: நியூஸ்கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா கைது சட்டவிரோதமானது, என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவரை உடனடியாக விடுதலை செய்யவும் அது உத்தரவிட்டுள்ளது.
டெல்லி போலீஸாா் இவரை தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். அந்தக் கைதைத்தான் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.
தன்னைக் கைது செய்ததை எதிர்த்து பிரபிர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. அப்போது, கைது செய்யப்பட்டது தொடர்பான நகலை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் அவரது கைது சட்டவிரோதமானது என்று வருகிறது. இந்த கைது சட்டவிரோதமாக நடந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அவரை சிறையில் அடைத்த உத்தரவும் செல்லாது என்று கோர்ட் உத்தரவிடுகிறது. பிரபிர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் பங்கஜ் பன்சால் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒருவரைக் கைது செய்தால், அவரைக் கைது செய்வது தொடர்பான உத்தரவை கைது செய்யப்பட்டவருக்கு எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்தக் கைது செல்லாது என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். அதே காரணத்தையே இந்த வழக்கிலும் சொல்லி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீவிரவாத தடுப்பு மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் பிரபிர். சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக நியூஸ்கிளிக் நிறுவனம் பணம் பெற்றதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பிரபிரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் எச்ஆர் அதிகாரி அமித் சக்கவர்த்தி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் அமித் அப்ரூவர் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}