இயற்கையின் சமநிலை.. இறைவனின் கணக்கு.. இதைப் புரிந்து கொள் மனிதனே!

Feb 03, 2026,11:49 AM IST

- டி. கலைமணி


உலகப் படைப்பில் எதுவுமே முழுமையானது இல்லை, அதே சமயம் எதுவுமே தேவையற்றதும் இல்லை. இயற்கையின் இந்த விசித்திரமான சமநிலையை விளக்கும் அற்புதத் தத்துவம் இது.


வாடாமல்லி.. நீண்ட காலம் வாடாமல் இருக்கும் வரம் பெற்றது. ஆனால், ஒரு மலருக்குரிய அடிப்படைத் தகுதியான மணம் அதனிடம் இல்லை.


வாச மல்லிகை.. அதன் நறுமணம் ஊரைக் கூட்டும். ஆனால், ஒரு நாள் பொழுதிலேயே அது வாடி உதிர்ந்துவிடும்.


வாழ்வு நீளமாக இருப்பதை விட, வாசம் வீசுவதாக இருப்பதே சிறப்பு என்பதை இது உணர்த்துகிறது.


மானுக்கு அதன் கொம்புகள் அழகு, ஆனால் அதன் இதயம் அச்சம் நிறைந்தது. வீரத்தோடு போரிடும் குணம் அதனிடம் இல்லை.




கீரி மிக மூர்க்கமாக தன்னை விடப் பெரிய பாம்பையே எதிர்க்கும் வீரம் உண்டு. ஆனால், அதற்கு கம்பீரமான கொம்புகள் இல்லை.


குயில் & மயில் பார்க்க கேட்க அத்தனை அழகு..  குயிலின் நிறம் கருமை, ஆனால் குரல் இனிமை. மயிலின் தோகை அழகு, ஆனால் அதன் குரல் கரகரப்பானது.


வெளித்தோற்றமும், உள்ளிருக்கும் திறமையும் எப்போதும் ஒரே இடத்தில் குடியிருப்பதில்லை.


தாகம் தீர்க்கும் நீருக்கு சுயமான நிறம் கிடையாது. ஒளி தரும் நெருப்புக்கு குளிர்விக்கும் ஈரம் கிடையாது. உயிரைக் காக்கும் காற்றுக்கு கண்ணால் காணும் உருவம் கிடையாது. உலகை இயக்கும் கதிரவனுக்கு தன் காலடியில் ஒதுங்க நிழல் கிடையாது.


வாழ்க்கை ஒரு முழுமையற்ற வட்டம்.. இறைவன் ஒருவனுக்கு அழகைக் கொடுத்தால் அறிவைக் குறைப்பான்; அறிவைக் கொடுத்தால் செல்வத்தைக் குறைப்பான்; செல்வம் கொடுத்தால் நிம்மதியைக் குறைப்பான்.


எல்லாவற்றையும் ஒருவனுக்கே கொடுத்துவிட்டால், மனிதன் தன்னைத் தெய்வமாக நினைத்து விடுவான். உன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடித்தான் நீ ஓட வேண்டும் என்பதே இயற்கையின் விதி.


உன்னிடம் இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட ஒரு கூட்டம் இருக்கும்போது, உன்னிடம் இல்லாததை நினைத்து நீ ஏன் கவலைப்படுகிறாய்?


எவர் வாழ்விலும் முழுமையான நிறைவு என்பது கிடையாது, அதே சமயம் எவர் வாழ்விலும் வெறும் குறை மட்டுமே இருக்காது. இந்தப் பிரபஞ்சம் ஈடுகட்டலால் ஆனது. புரிந்து கொள் மனிதனே...!! கிடைத்ததை ஏற்றுக்கொள், கிடைக்காததை விட்டுவிடு.. காரணம் அது உனக்கானது அல்ல.. மனதில் அமைதி கொள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்