திறமை!

Feb 03, 2026,03:27 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


நான் இல்லாமல் நீ இல்லை

உன்னுள் என்னை 

புதைத்து வைத்துள்ளாய்..... 


என்னை அறிந்து வெளிக்கொணர்ந்தால்

உந்தன் நிலை சிகரம் தான்..... 


ஒவ்வொருவருக்கும் 

ஒவ்வொரு விதமாய் இருக்கின்றேன்... 




பிறர் என்னை பயன்படுத்துவதை 

ஏங்கிப் பார்க்கிறாய்...... 


நீயே உன்னை தாழ்த்திக் கொள்கிறாய்..... 


தாழம்பூவாய் நீயும் மணக்க

என்னை உழைப்பில் சூடிடு.... 


உலகின் பார்வையை 

உந்தன் பக்கம் ஈர்த்திடு...... 


உன்னால் இயன்ற நன்மையை

உலகிற்கு ஈந்து மகிழ்ந்திடு.... 


திறமை என்ற நான்

ஒவ்வொருவருக்குள்ளும்  இருக்கிறேன்..... 


என்னை கண்டு பிடித்திடு

உன்னால் முடியும் என்று 

சாதனை பல புரிந்திடு 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்