- க.யாஸ்மின் சிராஜூதீன்
நான் இல்லாமல் நீ இல்லை
உன்னுள் என்னை
புதைத்து வைத்துள்ளாய்.....
என்னை அறிந்து வெளிக்கொணர்ந்தால்
உந்தன் நிலை சிகரம் தான்.....
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமாய் இருக்கின்றேன்...

பிறர் என்னை பயன்படுத்துவதை
ஏங்கிப் பார்க்கிறாய்......
நீயே உன்னை தாழ்த்திக் கொள்கிறாய்.....
தாழம்பூவாய் நீயும் மணக்க
என்னை உழைப்பில் சூடிடு....
உலகின் பார்வையை
உந்தன் பக்கம் ஈர்த்திடு......
உன்னால் இயன்ற நன்மையை
உலகிற்கு ஈந்து மகிழ்ந்திடு....
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறேன்.....
என்னை கண்டு பிடித்திடு
உன்னால் முடியும் என்று
சாதனை பல புரிந்திடு
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
தந்தையின் உடல்நிலை சரியில்லை... பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்: அண்ணாமலை
விஜய் கட்சி ஆபத்துல இருக்கு... அதனால தான் விசில் அடிக்கிறாங்க: ஜெயக்குமார் பேட்டி
பிப்., 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும்: புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
திமுக ஆட்சியில் கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருக்கிறது: அண்ணாமலை
பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தைகள்
ரஷ்ய எண்ணையை வாங்குவதை கைவிடுகிறது இந்தியா.. வரியைக் குறைத்தார் டிரம்ப்
தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழுவிபரம்!
தமிழ்நாடு உள்ளவரை நீ உயிரோடு இருக்கிறாய்...அறிஞர் அண்ணா நினைவு நாளில் வைரமுத்து உருக்கம்
{{comments.comment}}