சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (எம்.எல்.ஏக்கள்) சிறப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான அரசின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
பயிற்சி முகாமில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், "இது முற்றிலும் ஒரு 'விஜய் மாடல் அரசு' ஆகும். தற்போதைய சூழலில் தமிழக மக்களின் எதிர்காலம் மிகவும் பத்திரமாக இருக்கிறது. எதிர்காலம் என்னாகுமோ, ஏதாகுமோ என்று ஒரு காலத்தில் கதிகலங்கிக் கிடந்த மக்களுக்கு, தன்னுடைய புன்னகையாலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய ஒரு மாபெரும் தலைவர் தான் நம்முடைய முதல்வர் விஜய்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையின் பெருமைகளையும், முதல்வரின் ஆளுமையையும் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "இந்த தமிழக சட்டமன்றத்தின் மூலமாக நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற தீர்மானங்களும், கொண்டுவரப்பட்ட சட்டங்களும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கு என்றும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றன.
ஒட்டுமொத்த இந்திய தேசமே வியந்து பாராட்டும் வகையிலான பல உன்னதத் திட்டங்களை இந்தத் தமிழகம் நாட்டிற்குத் தந்திருக்கிறது. அத்தகைய பெருமைமிக்க சட்டமன்ற வரலாற்றை எப்போதும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர் தான் முதல்வர் விஜய்" என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழக சட்டசபை வரலாற்றை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள் நூலகத்திற்கு சென்று படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
வானவில் என்னும் மாயவில்
{{comments.comment}}