டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்து பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு எதற்கு என்று பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம், புத்தாண்டு வாழ்த்து கூறுவதற்காகவும், தமிழ்நாட்டு நிலவரங்கள் குறித்து பேசுவதற்காகவும் ஆளுநர், பிரதமரைச் சந்தித்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்ததால் கூட்டத் தொடர் முழுமையாக நடைபெற முடியாமல் அமளி துமளியுடனேயே முடிந்தது.

தமிழ்நாட்டிலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜகவுக்கு எதிராக திமுக பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மறுபக்கம் மத்திய அரசு மும்மொழி கொள்கையை வற்புறுத்தி வருவதாகவும் மாநில அரசு குற்றம் சாட்டி வருகிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகிறது திமுக.
இந்தப் பின்னணியில் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு தொடர்பாக ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே உரசல்களும் நிலவி வருகின்றன. இந்த நிலையில், 2025ம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டு சட்டசபைக் கூட்டத்தில்தான் ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்காமல் சலசலப்பு ஏற்பட்டது. இதைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}