20 வகையான அரசு வேலைகளுக்கு.. வந்தது சூப்பர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

May 15, 2024,06:38 PM IST

சென்னை: 20 வகையான அரசு பணிகளுக்கு டிஎன்பிசி எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் ஆள் சேர்க்க உள்ளது. இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 14 ஆகும்.


பல்வேறு வகையான அரசு வேலைகளுக்கு தேவைப்படும் ஆட்களை எடுக்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.




பணியிடங்கள் காலியாக உள்ள வேலை விவரம்:

அரசு சட்டக் கல்லூரிகளில் பிடி துறை இயக்குநர் பதவி (12 பணியிடங்கள்), மேனேஜர் கிரேட் 3 (2), சீனியர் ஆபீசர் (9), உதவி மேலாளர் (14),  உதவி மேலாளர் (லீகல் - 2), தமிழ் ரிப்போர்ட்டர் (5), இங்கிலீஷ் ரிப்போர்ட்டர் (5), அக்கவுண்ட்ஸ் ஆபீசர் கிளாஸ் 3 (1), அக்கவுண்ட்ஸ் ஆபீசர் (3), உதவி மேலாளர் - அக்கவுண்ட்ஸ் (21), துணை மேலாளர் அக்கவுண்ட்ஸ்  (1), உதவி மேலாளர் பினான்ஸ் (1), உதவி பொது மேலாளர் (1), விவசாயத்துறை உதவி இயக்குநர் (6), புள்ளியியல் உதவி இயக்குநர் (17), சமூக நலத்துறை பெண்கள் முன்னேற்றத்துறை உதவி இயக்குநர் (3), முதுநிலை உதவி இயக்குநர் பாய்லர்  (4), பர்சார் (6),  டவுன் பிளானிங் உதவி இயக்குநர் (4), உதவி மேலாளர் புராஜக்ட்ஸ் (2). 


மொத்தம் 118 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு ஆளெடுப்பு நடைபெறவுள்ளது.


ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 14ம் தேதி இரவு 11.59 மணி. திருத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் - ஜூன் 19ம் தேதி அதிகாலை 12.01 முதல் 21ம் தேதி இரவு 11.59 மணிக்குள்.


தேர்வு குறித்த விவரம்:


முதல் தாள் தேர்வு - ஜூலை 28ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை.


2ம் தாள் தேர்வு - ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும்.


மேலும்  விபரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பை அணுகலாம்.


https://tnpsc.gov.in/Document/english/07_2024_CTS_English_.pdf

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்