அரிட்டாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. 11,608 பேர் மீதான டங்ஸ்டன் வழக்கு மொத்தமாக ரத்து!

Jan 26, 2025,05:28 PM IST

மதுரை: அரிட்டாபட்டி கிராம மக்கள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்துள்ள நிலையில் , டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, வள்ளாளபட்டி உள்ளிட்ட சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மேலூர், மதுரை தல்லாகுளம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.


இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தற்போது கைவிட்டு விட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றி தங்களுக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டியில் இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தற்போது டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.




இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,  மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.


தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசின் ஒருபோது அனுமதிக்காது என்று உறுதி அளித்து இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரை வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதினார். மேலும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 9.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. இந்த டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்கள்.


இதன்படி இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்து 608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சங்கீதா சட்டம் 2023ன் கீழ் மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட நான்கு குற்ற வழக்குகளும் இன்று திரும்ப பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்