கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!

Dec 26, 2025,06:25 PM IST

- சிவ. ஆ.மலர்விழி ராஜா


நம் வாழ்வில்

பார்க்ககூடாத ஒரு தினம்....

கடலன்னை

அகோர தாண்டவம் 

ஆடிய தினம்....

சின்னஞ்சிறு  குழந்தைகளும்

உறவை பிரிந்த தினம்...

வாழ்வின் முடிவு

இதுதான் என்று

வலியை தந்த தினம்.....

சுறாவை போல் வந்து

உயிர்களை அள்ளி 

விழுங்கிய தினம்.....


அழகான அலையென்று

அருகே சென்றவர்களை

சிறை பிடித்த தினம்....

வலைவீசி மீன் பிடிப்பது

போல் அலை வீசி நம் 

இனம் அழிந்த தினம்.....

ஆழியின் தீராத பசிக்கு

நம் மக்கள் தன்னை

அர்பணித்த தினம்.....

உப்பு காற்றை சுவாசித்த

உயிர்களை உயிர் பலி

வாங்கிய தினம்.....

இனம் மொழி கடந்து 

எல்லாம் ஒன்றென்று

உணர வைத்த தினம்.....

இரக்கமில்லாத மனிதனையும் இயங்க

வைத்த தினம்.....

சுற்றி சுழன்று பட்டு

குழந்தைகளையும்

விட்டு செல்லாத தினம்....

கலங்கரை விளக்கம் இருந்தாலும் கரை

தேடி வந்து உயிர்களை

உள்வாங்கிய தினம்.....

உறவுகளை பிரித்து மனங்களை

இரணமாக்கிய தினம்...

இதயத்தை  உடைத்து 

இரும்பாக்கும்  தினம் 

இனி வாழ்வில் வேண்டாம் 

சுனாமி தினம்......!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்