- சிவ. ஆ.மலர்விழி ராஜா
நம் வாழ்வில்
பார்க்ககூடாத ஒரு தினம்....
கடலன்னை
அகோர தாண்டவம்
ஆடிய தினம்....
சின்னஞ்சிறு குழந்தைகளும்
உறவை பிரிந்த தினம்...
வாழ்வின் முடிவு
இதுதான் என்று
வலியை தந்த தினம்.....
சுறாவை போல் வந்து
உயிர்களை அள்ளி
விழுங்கிய தினம்.....

அழகான அலையென்று
அருகே சென்றவர்களை
சிறை பிடித்த தினம்....
வலைவீசி மீன் பிடிப்பது
போல் அலை வீசி நம்
இனம் அழிந்த தினம்.....
ஆழியின் தீராத பசிக்கு
நம் மக்கள் தன்னை
அர்பணித்த தினம்.....
உப்பு காற்றை சுவாசித்த
உயிர்களை உயிர் பலி
வாங்கிய தினம்.....
இனம் மொழி கடந்து
எல்லாம் ஒன்றென்று
உணர வைத்த தினம்.....
இரக்கமில்லாத மனிதனையும் இயங்க
வைத்த தினம்.....
சுற்றி சுழன்று பட்டு
குழந்தைகளையும்
விட்டு செல்லாத தினம்....
கலங்கரை விளக்கம் இருந்தாலும் கரை
தேடி வந்து உயிர்களை
உள்வாங்கிய தினம்.....
உறவுகளை பிரித்து மனங்களை
இரணமாக்கிய தினம்...
இதயத்தை உடைத்து
இரும்பாக்கும் தினம்
இனி வாழ்வில் வேண்டாம்
சுனாமி தினம்......!
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}