- சிவ. ஆ.மலர்விழி ராஜா
நம் வாழ்வில்
பார்க்ககூடாத ஒரு தினம்....
கடலன்னை
அகோர தாண்டவம்
ஆடிய தினம்....
சின்னஞ்சிறு குழந்தைகளும்
உறவை பிரிந்த தினம்...
வாழ்வின் முடிவு
இதுதான் என்று
வலியை தந்த தினம்.....
சுறாவை போல் வந்து
உயிர்களை அள்ளி
விழுங்கிய தினம்.....

அழகான அலையென்று
அருகே சென்றவர்களை
சிறை பிடித்த தினம்....
வலைவீசி மீன் பிடிப்பது
போல் அலை வீசி நம்
இனம் அழிந்த தினம்.....
ஆழியின் தீராத பசிக்கு
நம் மக்கள் தன்னை
அர்பணித்த தினம்.....
உப்பு காற்றை சுவாசித்த
உயிர்களை உயிர் பலி
வாங்கிய தினம்.....
இனம் மொழி கடந்து
எல்லாம் ஒன்றென்று
உணர வைத்த தினம்.....
இரக்கமில்லாத மனிதனையும் இயங்க
வைத்த தினம்.....
சுற்றி சுழன்று பட்டு
குழந்தைகளையும்
விட்டு செல்லாத தினம்....
கலங்கரை விளக்கம் இருந்தாலும் கரை
தேடி வந்து உயிர்களை
உள்வாங்கிய தினம்.....
உறவுகளை பிரித்து மனங்களை
இரணமாக்கிய தினம்...
இதயத்தை உடைத்து
இரும்பாக்கும் தினம்
இனி வாழ்வில் வேண்டாம்
சுனாமி தினம்......!
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
துபாய் தங்கம்.. ஆர்வம் காட்டும் இந்தியர்கள்.. சுங்கவரி இன்றி எவ்வளவு நகை கொண்டு வரலாம்?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
எரிபொருள் சிக்கனம்: தமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகன எண்ணிக்கை குறைப்பு!
South West Monsoon: தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்!
என்ன செய்தாள் உனக்கு??
Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடி.. கருணைக்கிழங்கு மசியல்!
திருநீற்றின் மகிமை .. விஷால் விளையாட்டுக்கள் (18)
{{comments.comment}}