- சிவ. ஆ.மலர்விழி ராஜா
நம் வாழ்வில்
பார்க்ககூடாத ஒரு தினம்....
கடலன்னை
அகோர தாண்டவம்
ஆடிய தினம்....
சின்னஞ்சிறு குழந்தைகளும்
உறவை பிரிந்த தினம்...
வாழ்வின் முடிவு
இதுதான் என்று
வலியை தந்த தினம்.....
சுறாவை போல் வந்து
உயிர்களை அள்ளி
விழுங்கிய தினம்.....

அழகான அலையென்று
அருகே சென்றவர்களை
சிறை பிடித்த தினம்....
வலைவீசி மீன் பிடிப்பது
போல் அலை வீசி நம்
இனம் அழிந்த தினம்.....
ஆழியின் தீராத பசிக்கு
நம் மக்கள் தன்னை
அர்பணித்த தினம்.....
உப்பு காற்றை சுவாசித்த
உயிர்களை உயிர் பலி
வாங்கிய தினம்.....
இனம் மொழி கடந்து
எல்லாம் ஒன்றென்று
உணர வைத்த தினம்.....
இரக்கமில்லாத மனிதனையும் இயங்க
வைத்த தினம்.....
சுற்றி சுழன்று பட்டு
குழந்தைகளையும்
விட்டு செல்லாத தினம்....
கலங்கரை விளக்கம் இருந்தாலும் கரை
தேடி வந்து உயிர்களை
உள்வாங்கிய தினம்.....
உறவுகளை பிரித்து மனங்களை
இரணமாக்கிய தினம்...
இதயத்தை உடைத்து
இரும்பாக்கும் தினம்
இனி வாழ்வில் வேண்டாம்
சுனாமி தினம்......!
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}