டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த டெல்லி வந்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சைகாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 9:51 மணிக்கு அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் எம்பிக்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்
எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!
மணாளனின் மாண்புகள்!
Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..
{{comments.comment}}