மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே

Mar 31, 2025,06:02 PM IST

மும்பை: தமிழ்நாட்டைப் பாருங்கள்.. இந்தி வேண்டாம் என்று தைரியமாக  சொல்கிறது. கேரளாவும் கூட வேண்டாம் என்று சொல்கிறது. அந்த தைரியம் நமக்கும் வேண்டும். மராத்தியில் யாராவது பேச மறுத்தால் முகத்திலேயே அடியுங்கள் என்று மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.


மகாராஷ்டிராவில் நீண்ட காலமாகவே இந்தி பேசுவோருக்கு எதிரான போக்கு இருந்து வருகிறது. அங்குள்ள மராத்தியர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாக பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்களுக்கு எதிரான மோதல்கள் அவ்வப்போது வெடித்தும் வருகின்றன.


இந்த நிலையில் தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போக்கை மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே வரவேற்றுள்ளார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த குடி பட்வா பேரணியில் கலந்து கொண்டு அவர் பேசும்போது கூறியதாவது:




மும்பைக்கு வந்து வாழும் சிலர் சொல்கிறார்கள், மராத்தியில் பேச மாட்டோம் என்று. அப்படிப் பேசுவோருக்கு முகத்திலேயே அடி விழும்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி உண்டு. அந்த மொழியை நாம் மதிக்க வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும்.


நாளை முதல் ஒவ்வொரு வங்கியாக, நிறுவனமாக செக் பண்ணுங்க. மராத்தியில் பேசுகிறார்களா என்று சோதனை பண்ணுங்க. அனைவரும் மராத்திக்கு ஆதரவாக திரண்டு வர வேண்டும்.


தமிழ்நாட்டைப் பாருங்கள். இந்தி வேண்டாம் என்று அவர்கள் தைரியமாக சொல்கிறார்கள். கேரளாவும் கூட தைரியமாக நிராகரித்துள்ளது.


ஜாதியால் மக்கள் பிரியக் கூடாது. நமது மாநிலத்தை ஆளுவோர் திட்டமிட்டு மக்களிடையே ஜாதி துவேஷத்தைப் பரப்பி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப ஜாதியைக் கையில் எடுக்கிறார்கள்.


மகாராஷ்டிராவில் உள்ள இளைஞர்களுக்கு நான் விடுக்கும் ஒரே கோரிக்கை, முதலில் வாட்ஸ் ஆப்பில் வரலாற்றைப் படிப்பதைத் தவிருங்கள். அது அரசியல் ரீதியாக உங்களைப் பிளவுபடுத்த பரப்பபப்படும் பொய். அதிலிருந்து வெளி வாருங்கள். மராத்தியர்களாக ஒன்றிணையுங்கள். அதானிக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்படும் நிலங்கள் குறித்த பிரச்சினையிலிருந்து இவர்கள் நம்மைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்