மக்களே உஷார்...தமிழகத்தில் இன்றும் மழை இருக்காம்

Aug 29, 2023,02:28 PM IST
சென்னை : தமிழகத்தில் இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நேற்று இரவு வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று எச்சரித்திருந்தது. இதே போல் சில மாவட்டங்களில் இரவு வரை நன்கு மழை பெய்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் இன்று அதிகாலை பல பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. 



இந்நிலையில் இன்றும் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு கோவை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகத்தில் இன்னும் சில நாட்களக்கு மழை தொடரலாம் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம் தொடர்ந்து மழை பெய்தால் மீண்டும் வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்