தென் மாவட்டங்கள், டெல்டாவைப் புரட்டி எடுக்கும் கன மழை.. 25,26ம் தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை!

Nov 20, 2024,06:33 PM IST

சென்னை:   வங்கக்கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.


நடப்பு ஆண்டில் வங்கக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மாறி மாறி காற்று சுழற்சிகள் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் இந்த சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பருவமடையும் தீவிரமடைந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்  சாலையில் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. 




டெல்டா மாவட்டங்களில் செம மழை: 


நாகை, வேதாரண்யம், சிக்கல், முட்டம், கீழ்வேளூர், திருமருகல், போன்ற பகுதிகளில் விட்டு விட்டு பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அப்ப பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்தது. நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கடந்த இரண்டு நாட்களில் 29 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 


தூத்துக்குடியில் கன மழை:


இது தவிர தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை விட்டு விட்டு தற்போது வரை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடி சாலையில் உள்ள திருச்செந்தூர், சாத்தான்குளம், காயல்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழை நீர் செல்வதால் அப்பகுதிகளில் உள்ள உப்பளங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூரில் தலா 45 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குலசேகரபட்டினத்தில் 39 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை: 




அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் முடிவு செய்து கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதனை அடுத்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர், ஆகிய மாவட்ட ஆட்சியளர்களும் மழை விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளனர்.


அதன்படி கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,  திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:


இந்த நிலையில் தென் தமிழக மற்றும் குமரி கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் மிதமான மழை:


இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 24ம் வரை தேதி ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால்  மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


25 ஆம் தேதி கனமழை: 


கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய ஏழு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி

news

ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!

news

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை

news

மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?

news

Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!

news

CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

TVK Campaign: முதலில் நாளிலேயே 3 இடங்களில் பிரச்சாரம் ரத்து... என்ன செய்ய போகிறார் விஜய்?

news

Tamil Nadu Elections: பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

news

IPL 2026.. ஐபிஎல் கிரிக்கெட் 2026 : பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்