மக்களே கவனம்.. சென்னையில் நாளை மழை அளவு அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

Oct 15, 2024,02:53 PM IST

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சில இடங்களில் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது. நாளை காலை தற்போதைய அளவை விட மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. நாளை சென்னைக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதன்படி, சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி தற்போது வரை சில இடங்களில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 13 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும். இடைவிடாமல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை உடனே நிற்பதற்கான வாய்ப்பு இல்லை. நாளை மேலும் அதிகரிக்கும்.




வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை இன்னும் நெருங்கவில்லை. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடையும். அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற அதிக வாய்ப்பு இல்லை. சென்னைக்கு அருகே மேகத்திரள்கள் மிக மெதுவாக நகர்ந்து வருவதால் அதி கனமழை பெய்து வருகிறது. 


அதிக மேகக்திரள்கள்  வந்தால் குறுகிய நேரத்திலேயே அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த அதி கன மழைக்கு இன்றே வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது. தற்போது வட சென்னை பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. தென் சென்னை பகுதிகளில் தற்போது மழை விட்டிருந்தாலும் மீண்டும் கன மழை தொடரும்.


இன்று காலை முதல் தற்போது வரை சென்னை முழுவதும் மழை விட்டு விட்டு  பெய்து வருகிறது. மாலை இரவு நேரங்களில் மழை தொடரும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று  20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்றை விட நாளை காலை மழை பொழிவு அதிகரிக்கும். நாளை காலையிலேயே 20 சென்டிமீட்டர் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.


அண்ணா நகர் போன்ற பகுதிகளில் இன்று காலை 8:30 மணி வரை 9 சென்டிமீட்டர் மழை பெய்தது. அதன் பிறகும் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 4 மணி நேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்றும் வட உள் மாவட்டங்களில்  மழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேலும் மேற்கு நோக்கி காற்றின் திசை நகர்ந்துவிட்டால் வட உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் நாளை மழை கொஞ்சம் அதிகரிக்கும். தென் உள் மாவட்டங்களில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்