ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை தன்னலமற்று உடல் பொருள் ஆவி அனைத்தும் என் பிள்ளைகளுக்கு என்று கொடுத்து வாழும் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி சொல்லும் நாள் இது.
நல்ல ஆசிரியர்களால் வழி நடத்தப்பட்ட மாணவர்கள் ஒரு போதும் தடம் மாறுவதில்லை.

மாணவர்கள் பலவிதம்
ஒவ்வொருவரும் ஒரு விதம்
ஆனால் ஆசிரிய பெருமக்களோ ஒரே விதம்
நல் வழி தந்து அறிவையும் ஆற்றலையும் பெருக்கி சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் தன் மாணாக்கரைப் பார்த்து மகிழும் உன்னத பணியையச் செம்மையோடு செய்யும் சிற்பிகள்தான் ஆசிரியப் பெருமக்கள்
தட்டிக் கொடுத்து கற்றுக் கொடுப்பதில் தோழனாய், அன்பு காட்டி அரவணைப்பதில் அன்னையாய், குரலை உயர்த்தி குறைகளை சுட்டிக் காட்டி வழி நடத்துவதில் வழி காட்டியாய் வலம் வரும் ஒளி விளக்கு.
கல்வி கற்கும் திறனில் குறையிருந்தால் உன்னால் முடியும் முடியும் என்று திரும்பத் திரும்ப தன் மாணவச் செல்வங்களின் காதில் சொல்லிச் சொல்லி நம்பிக்கை தரும் நட்சத்திரம்.
பிள்ளைகள் தன் சுற்றம் மறந்து குதூகலித்து ஆடிப் பாடி மகிழ்ந்து கற்றுத் தெளிய அறிவு புகட்டும் ஆசான் நமது ஆசிரிய பெருமக்கள்.
ஆசிரியர்களைப் போற்றுவோம்.. சீரிய குடிமக்களாக மாற்றும் பெரும் சேவை செய்யும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்
கட்டுரை: வி. ஜெயலட்சுமி, மஸ்கட்
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}