ஹைகோர்ட் உத்தரவுப்படி.. தென்காசியில் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணிக்கை!

Jul 13, 2023,10:58 AM IST
தென்காசி: தென்காசி சட்டசபைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. தென்காசி தொகுதியில் நடை பெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பழனி நாடார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 370 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியைத் தழுவினார்.

இந்த நிலையில் பழனி நாடார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் செல்வமோகன்தாஸ் பாண்டியன். அதில் தபால் வாக்குகளை சரியாக எண்ணவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மீண்டும் தபால் வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண  வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மொத்தம் 2589 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், பழனி நாடாருக்கு 1069 தபால் வாக்குகளும்,  செல்வமோகன்தாஸ் பாண்டியனுக்கு  674 வாக்குகளும் கிடைத்திருந்தன.  இந்த வாக்குகள் அனைத்தும் தற்போது தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன என்பதால் இந்த மறு வாக்கு எண்ணிக்கை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்