திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாள், ஒற்றுமை யாத்திரையில் தடம் பதிக்கும் தளிர்கள் அமைப்பின் தலைவரான செ. திவ்யஸ்ரீ கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலையிலும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் மேரா யுவ பாரத் திருவண்ணாமலை சார்பிலும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமை வகித்து முதன்மை உரையாற்றினார். திருவண்ணாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை, முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மேரா யுவ பாரத் அமைப்பின் மாவட்ட இளைஞர் அதிகாரி நம்மல கிருஷ்ணா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் இளைஞர் அமைப்பின் தலைவர் செ. திவ்யஸ்ரீ உள்ளிட்டோர் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.
Imposter Syndrome என்றால் என்ன.. இது யாருக்கெல்லாம் வரும்.. எப்படி சரி செய்வது?
ஆதவ் அர்ஜூனா அழைப்பு.. குழப்பத்தில் கட்சிகள்.. வேலுமணி தரப்புக்கு பதவி உண்டா?
மண்டையைப் பிளக்கும் கோடை வெயில்.. எல் நினோ தாக்கத்தால் அதிகரிக்கும் இரவு நேர வெப்பம்!
திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக புதிய தேர்த் திருவிழா
10ம் வகுப்பில் தோல்வியா.. கவலை வேண்டாம்.. ஜூன் மாதம் துணைத் தேர்வு எழுதலாம்
10ம் வகுப்பு தேர்வில்.. அதிக தேர்ச்சியில் புதுக்கோட்டை.. அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முதலிடம்!
10ம் வகுப்பு தேர்வு: பாடவாரியாக சென்டம் போட்ட தங்கங்கள்.. தமிழில் 34 பேர்.. அறிவியல் டாப்!
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. சென்டம் போட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1931
The Golden Bloom of a Melody.. கேட்கும்போதெல்லாம் மயக்கும் மாயாஜாலம்!
{{comments.comment}}