திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாள், ஒற்றுமை யாத்திரையில் தடம் பதிக்கும் தளிர்கள் அமைப்பின் தலைவரான செ. திவ்யஸ்ரீ கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்றார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலையிலும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் மேரா யுவ பாரத் திருவண்ணாமலை சார்பிலும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமை வகித்து முதன்மை உரையாற்றினார். திருவண்ணாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை, முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மேரா யுவ பாரத் அமைப்பின் மாவட்ட இளைஞர் அதிகாரி நம்மல கிருஷ்ணா சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் இளைஞர் அமைப்பின் தலைவர் செ. திவ்யஸ்ரீ உள்ளிட்டோர் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}