திருவண்ணாமலையில் நடந்த ஒற்றுமை யாத்திரையில்.. தடம் பதித்த செ.திவ்யஸ்ரீ

Oct 31, 2025,03:47 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் 150வது பிறந்த நாள், ஒற்றுமை யாத்திரையில் தடம் பதிக்கும் தளிர்கள் அமைப்பின் தலைவரான செ. திவ்யஸ்ரீ கலந்து கொண்டு பாராட்டுக்களைப் பெற்றார்.


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலையிலும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் மேரா யுவ பாரத் திருவண்ணாமலை சார்பிலும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது.




நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தலைமை வகித்து முதன்மை உரையாற்றினார்.  திருவண்ணாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை, முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மேரா யுவ பாரத் அமைப்பின் மாவட்ட இளைஞர் அதிகாரி நம்மல கிருஷ்ணா சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் இளைஞர் அமைப்பின் தலைவர் செ. திவ்யஸ்ரீ உள்ளிட்டோர் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!

news

ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!

news

தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!

news

தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி

news

SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?

news

குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

news

ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!

news

இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்