- சசிகலா விஸ்வநாதன்
வந்ததும், போனதும்,
வருவதும், இருப்பதும்,
தொடர் வினை என்றே
தொல்லைகள் தவிர்த்து,
நிந்தனை செய்யாது
நிகழ்வினை வாழ்ந்தும்,
சொந்தமும் பந்தமும்
பெருந்துக்கம் ஆகி,
ஆதி முதல் அந்தம் வரை
அவன் ஆக்கினையின் நாடகம்
நடித்தே ஓய்ந்தேன்.

எத்துணையும் இன்றி,
அத்துணை நடப்பது,
இயலாதென்றே
நித்திரை செய்ய முடிவும் செய்ய,
அரங்கத்தாடுவான் ஆணையில்,
சித்தனார் செய்திறனில்
அசையா மனம்
கொண்டு ஏகினேன் அவன் காட்டிய தனியிடம்.
ஒன்று மட்டும் சொல்லிப் போவேன்:
இருளுக்குள் ஒளியுண்டு
மருளுக்குள் அறிவுண்டு
அருளுக்குள் ஆங்காரமும் உண்டு.
புரிந்தவருக்கு பொருள் புரியும்.
புரியாதவருக்கு புதிராகவே இருக்கட்டுமது.
அதுவே எனக்கு சம்மதம்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}