சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறை வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மது ஆலைகள், மது விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் தலைமை நிறுவனம் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்புள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியது. குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம், அமலாக்கத்துறையினர் சோதனையின் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் மாநில அரசின் அனுமதியின்றி பி எம் எல் ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டாஸ்மார்க் முறைகேடு விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொய் சொல்ல வேண்டாம். அனைத்து செய்திகளிலும் வந்துள்ளது. இரவில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் அளித்த அமலாக்க துறையினர் நாங்கள் இரவில் சோதனை நடத்தவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறை பிடிக்கவும் இல்லை. யாரை துன்புறுத்துவமும் இல்லை என தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இவ்விவகாரத்தில் மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதே சமயத்தில் அமலாக்கதுறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}