டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.‌. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!

Mar 20, 2025,06:57 PM IST

சென்னை:   டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில், அமலாக்கத்துறை வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மது ஆலைகள், மது விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் தலைமை நிறுவனம் என 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. 




இந்த விவகாரம் தமிழகத்தில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்புள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள்  வலியுறுத்தியது. குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக பாஜக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தது. 


இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம், அமலாக்கத்துறையினர் சோதனையின் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.  அந்த மனுவில் மாநில அரசின் அனுமதியின்றி பி எம் எல் ஏ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ‌


இந்த நிலையில், டாஸ்மார்க் முறைகேடு விவகாரம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொய் சொல்ல வேண்டாம். அனைத்து செய்திகளிலும் வந்துள்ளது. இரவில் ஏன் சோதனை நடத்த வேண்டும் என நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.


அதற்கு பதில் அளித்த அமலாக்க துறையினர் நாங்கள் இரவில் சோதனை நடத்தவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறை பிடிக்கவும் இல்லை. யாரை துன்புறுத்துவமும் இல்லை என  தெரிவித்தது. 


இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இவ்விவகாரத்தில்  மார்ச் 25 வரை நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதே சமயத்தில் அமலாக்கதுறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

அத்தே.. அத்தே...!

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

முட்டி நின்று பார்த்ததனால்... புத்தம் புதிதாய் பூத்த மலர் போல்...!

news

சற்று ஆறுதலடைந்த வாடிக்கையாளர்களை மீண்டும் அதிர்ச்சிஅடையச் செய்த தங்கம் விலை.. விலை என்ன தெரியுமா?

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைக்கிறது காங்!

news

ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி இங்கே வா வா (மழலையர் பாடல்)

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

news

நான் விரும்பும் வகுப்பறை

அதிகம் பார்க்கும் செய்திகள்