கணிதத்தின் தலைமகன்!

Dec 22, 2025,02:30 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


பூஜ்ஜியத்துக்குள்ளே

ஒரு ராஜ்யத்தை காண வைத்து......

ராமானுஜ மேதை என

தேற்றங்களை தெளிய வைத்தாய்.....!

வறுமையின் பிடிக்கும்

பிடித்தவனாகி வாழ்வின்.....

துயரங்களை அனுபவித்தாய்.....!

வாழ்க்கை  கணக்குகளில் ....

காலம் உன்னை கலங்க வைத்தாலும்...‌...

நீ காணும் கனவுகளில் காலம் ......

உனக்கு கொடுத்த பரிசு.....




கணிதமேதை எனும் மகுடம் ......

தேற்றங்களை தெரிய வைத்தாய் .....!

பகா எண்களை பகுத்தறிந்து

ஹார்டின் கனவுக்கு விதை ஆனாய்.....!

நெஞ்சமெல்லாம் கணக்கு.....

நினைவெல்லாம்

கனவுகளாக வாழ்ந்தாய்....!

ஒழுக்கமும் நேர்மையும் உனது 

வாழ்க்கை கணக்கு......!

மனைவியின் அன்பை 

மானசிகமாக அனுபவித்து......

மனம் உடைந்து 

வாழ்வை முடிக்க துணிந்தாய்......!

வாழ்க்கை பயணத்தில்

வறுமையை கடந்து.....

திறமையை வளர்த்து

கணிதத்தின் தலைமகனாய்......

தரணியில் ஆள வந்தாய்......!

வாழ்க உனது புகழ்.......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

news

தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி

news

தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

news

தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

news

விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?

news

தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை

news

பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி

news

பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!

news

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்