கணிதத்தின் தலைமகன்!

Dec 22, 2025,02:30 PM IST

- சிவ .ஆ.மலர்விழி ராஜா


பூஜ்ஜியத்துக்குள்ளே

ஒரு ராஜ்யத்தை காண வைத்து......

ராமானுஜ மேதை என

தேற்றங்களை தெளிய வைத்தாய்.....!

வறுமையின் பிடிக்கும்

பிடித்தவனாகி வாழ்வின்.....

துயரங்களை அனுபவித்தாய்.....!

வாழ்க்கை  கணக்குகளில் ....

காலம் உன்னை கலங்க வைத்தாலும்...‌...

நீ காணும் கனவுகளில் காலம் ......

உனக்கு கொடுத்த பரிசு.....




கணிதமேதை எனும் மகுடம் ......

தேற்றங்களை தெரிய வைத்தாய் .....!

பகா எண்களை பகுத்தறிந்து

ஹார்டின் கனவுக்கு விதை ஆனாய்.....!

நெஞ்சமெல்லாம் கணக்கு.....

நினைவெல்லாம்

கனவுகளாக வாழ்ந்தாய்....!

ஒழுக்கமும் நேர்மையும் உனது 

வாழ்க்கை கணக்கு......!

மனைவியின் அன்பை 

மானசிகமாக அனுபவித்து......

மனம் உடைந்து 

வாழ்வை முடிக்க துணிந்தாய்......!

வாழ்க்கை பயணத்தில்

வறுமையை கடந்து.....

திறமையை வளர்த்து

கணிதத்தின் தலைமகனாய்......

தரணியில் ஆள வந்தாய்......!

வாழ்க உனது புகழ்.......!


(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

news

அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு

news

நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்

news

ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

news

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

news

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

news

வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

news

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா

அதிகம் பார்க்கும் செய்திகள்