சென்னை: ரேஷன் கடைகளில் முறையீடுகளை தடுக்கும் நோக்கில் மின்னணு தராசுடன் pos கருவி இணைக்கும் நடைமுறை விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது. தற்போது சென்னையில் ஒரு சில கடைகளில் மட்டுமே இந்த நடைமுறை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், உணவுப் பொருட்களை மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே சமயத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இருப்பது இல்லை எனவும், இதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படியே சமீபத்தில் குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் டிஜிட்டல் மயமான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டது. அதேபோல் பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி வந்த நிலையில், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது ரேஷன் கடைகளில் புதிய முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது தமிழக அரசு. அதாவது ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், பிஓஎஸ்(pos) கருவியுடன் மின்னணு தராசு இணைக்கும் நடைமுறை சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஒரு சில கடைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விரைவில் இந்த நடைமுறை மாநில முழுவதும் அமலுக்கு வரவுள்ளது எனவும், இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடையில் பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் கூட்டுறவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Pos(Point of Sale) என்றால் என்ன..?
POS, விற்பனையாளர்கள்
பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இது கணினி அடிப்படையிலான பணப் பதிவேடாகும், இது ஆர்டர்களை எண்ணுதல், பணம் செலுத்துதல், சரக்கு மற்றும் கொள்முதல்களைக் கண்காணித்தல், விலைப் பட்டியல்களை உருவாக்குதல், சந்தைப்படுத்தல், தரவைச் சேகரித்தல் ஆகியவற்றைச் செய்யும் திறன் கொண்ட மென்பொருள் மற்றும் வன்பொருளை கொண்டுள்ளது.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}