- ஸ்வர்ணலட்சுமி
மார்ச் 8ம் தேதி.. சர்வதேச மகளிர் தினம். பெண்களின் பணிக்கு சிறப்பும், பாராட்டும் தெரிவிக்கும் வகையிலும் உலகம் முழுவதும் பெண்கள் அனைத்து துறையிலும் புரியும் சாதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
எப்போது இருந்து தொடங்கியது மகளிர் தின கொண்டாட்டம்?

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் யோசனை கிளாரா ஜெட்கின் என்பவர் 1910இல் கோபன் ஹே கணில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டின் போது, இந்த 'சர்வதேச மகளிர்' தினத்தை கொண்டாட பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கிளாராவின் யோசனையை அவருடைய ஆலோசனையை ஆதரித்தனர்.
1911 இல் ஆஸ்திரியா, டென்மார்க் ,ஜெர்மனி, மற்றும் ஸ்விட்சர்லாந்து இல் முதன் முதலில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மகளிர் தினம் மார்ச் எட்டாம் நாள் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 1909 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1975 சர்வதேச மகளிர் ஆண்டாக அறிவித்தது.
இந்த ஆண்டு 2025 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் அதாவது தீம் என்ன என்று பார்த்தால் 'செயலை துரிதப்படுத்து' ஆங்கிலத்தில் ஆக்ஸிலரேட் ஆக்சன்(Accelerate Action) என்பதாகும். இந்த கருப்பொருள் பெண்கள் சமத்துவத்தை விரைவுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
பெண்களின் முன்னேற்றத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் உத்திகள் வளங்கள் மற்றும் செயல்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அவற்றை செயல்படுத்தவும் ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய அழைப்பாக 'ஆக்சலேட் ஆக்சன்' 'செயலை துரிதப்படுத்து'(Accelerate Action')இந்த கருப்பொருள் அமைந்துள்ளது.
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}