- க.யாஸ்மின் சிராஜூதீன்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும்
வாழ்க்கையின் பக்கங்களே
திருப்பிப் பார்த்தால் கடந்து வந்த பாதையே ....
வெற்றிக்கும் தோல்விக்கும்
கடந்து வந்த பாதை வரலாறு பேசுமே ...
அஞ்சி அஞ்சிவாழ்வார்அவனியிலே
மண்ணில் கலந்து கரைவரே.....
வாழ்ந்த காலம்கூட மணல்மேல் சுவடே ...
பாதையை கடக்கத்துணிந்தவனுக்கு ஆயிரம் தடைகள் வழிதனிலே...
தடையை படிக்கல்லாக்கியவனுக்கே
கடந்து வந்த பாதை சிகரம் தொடுமே
வரலாறு படைக்குமே.....

கடினம் என்பார் கண்விழித்து உன் குறைகளைக்காண்பரே ....
உந்தன் பாதையை மறித்து கடக்க
தயக்கம்கொள்ளச் செய்வரே ......
ஊக்கம் அளிப்பவர்கள் உறங்காமல்
நிறைகளைக்காண்பரே ....
உந்தன் பாதையை செம்மையாக்கி
கடக்க உதவி செய்வரே .....
ஒவ்வொரு நாளும் பாதையை கடக்கிறோம்....
பல நிகழ்வுகளை சந்திக்கிறோம்...
முன்னேறிச்செல்லும் பாதையில்
கடந்தவையெல்லாம் கடந்து வந்த பாதைதான்...
காலம்கடந்தால் கடந்து வந்த பாதைதான் ..
காலம் பேசனும் இதுதான் வழிகாட்டும் பாதை என்றுதான் ....
வயது முதிர்வில் அசைபோடனும்
இனிய கடந்துவந்த
பாதையைத்தான்....
வாழும் போதேஇன்பமாய்,துணிவாய் வாழ்ந்தால் கிடைக்கும்தான்....
வெல்லும் முன்னே ஏதோ செல்லும் பாதைதான்...
வென்றபின்னே கடந்து வந்த பாதைதான்....
கடந்த , கடக்கும்,கடக்க இருக்கும்
பாதையை வெற்றிப் பாதையாக்கிடு..
வரலாறு போற்ற வாழ்ந்திடு....!!!
ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பாதை உண்டு ...
திரும்பிப் பார்க்க
கடந்து வந்த பாதை உண்டு.....
பிறருக்கு வழிகாட்டும் உறுதியான பாதை அமைத்திடு ...
என்றும் நீங்கா வரலாறு படைத்திடு...!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
திருப்பதி கோவிலில் இன்று முதல் சர்வ தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தம்:திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
Thoothukudi Airport.. தூத்துக்குடி விமான நிலைய பெயரை மாற்ற அமைச்சர் எல். முருகன் கோரிக்கை
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்
{{comments.comment}}