திருநெல்வேலி சீமையிலே.. நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்.. பக்தர்கள் கோலாகலம்!

Jun 21, 2024,09:05 PM IST

திருநெல்வேலி: புகழ் பெற்ற, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.


திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் தமிழகத்தில் உள்ள சிறப்பு மிக்க கோவில் தலங்களில் ஒன்றாகும். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், ஆனி மாசம் நடைபெறும் ஆனித் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வாண்டிற்கான திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், காலை மற்றும் இரவில் சுவாமி- அம்பாள் வீதிஉலா மற்றும் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.




விழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியில் காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமாள் வீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா வெகு சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரேட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருளினார். இந்த தேரோட்ட நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்த தோரோட்டத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இவ்விழாவில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 147 கண்காணிப்பு கேமராக்கள் கோவிலின் உட்புறமும் வெளிபுறமும் பொறுத்தப்பட்டுள்ளன.




பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவ குழு, நடமாடும் கழிப்பறைகள் என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்  இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.


500 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் மிகப் பழமையான தேரோட்ட வைபவங்களில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டமும் முதன்மையானது என்பது நினைவிருக்கலாம்.


புகைப்படங்கள்: காயத்ரி கிருஷாந்த்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்