கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமாகா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த நடைப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரமாண்ட நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மோடி அவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் திரளாக என்னை வரவேற்றார்கள். ஆயிரக்கணக்கான தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்களோடு இணைந்து இன்றைக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்கால இந்தியா மிக உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையிலே அமையும். அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட கால மத்திய அரசினுடைய பிரதமர் மோடி தலைமையிலான மக்கள் பணிகள், மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை உறுதியாக ஏற்படுத்துவார்கள் என நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு எங்களது களப்பணி அமையும் என்று கூறினார்.
திமுகவின் சுரண்டல் கொள்கையால் மக்கள் வாழ்க்கை நடத்தவே வழியின்றி தடுமாறுகின்றனர்: டாக்டர் அன்புமணி!
வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
முதல்வருடன் சந்திப்பு.. ஓபிஎஸ் திடீர் அறிக்கைக்கு இது தான் காரணமா.. அடுத்து என்ன செய்வார்?
சிபு சோரன்.. மறக்க முடியாத அரசியல்வாதி.. ஜார்க்கண்ட் அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவு!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.40 உயர்வு!
TN Assembly elections 2026: அதிகமான கட்சிகள் கூட்டணிக்கு வருவது திமுக.,விற்கு சாதகமா, பாதகமா?
2வது மாநில மாநாடு.. விஜய் போடும் செம ஸ்கெட்ச்... கோர்ட்டிற்கு செல்லுமா தவெக.. என்ன செய்யும் திமுக?
ஆடிப் பட்டம் தேடி விதை.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா நம்ம முன்னோர்கள்?
முதல்வரை சந்தித்தது ஏன்.. இதையெல்லாமா அரசியலாக்குவீங்க.. ஓ.பி.எஸ். ஆவேச அறிக்கை
{{comments.comment}}