கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமாகா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த நடைப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரமாண்ட நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மோடி அவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் திரளாக என்னை வரவேற்றார்கள். ஆயிரக்கணக்கான தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்களோடு இணைந்து இன்றைக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்கால இந்தியா மிக உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையிலே அமையும். அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட கால மத்திய அரசினுடைய பிரதமர் மோடி தலைமையிலான மக்கள் பணிகள், மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை உறுதியாக ஏற்படுத்துவார்கள் என நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு எங்களது களப்பணி அமையும் என்று கூறினார்.
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}