கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமாகா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த நடைப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரமாண்ட நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மோடி அவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் திரளாக என்னை வரவேற்றார்கள். ஆயிரக்கணக்கான தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்களோடு இணைந்து இன்றைக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வருங்கால இந்தியா மிக உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையிலே அமையும். அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட கால மத்திய அரசினுடைய பிரதமர் மோடி தலைமையிலான மக்கள் பணிகள், மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.
தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை உறுதியாக ஏற்படுத்துவார்கள் என நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு எங்களது களப்பணி அமையும் என்று கூறினார்.
பஹல்கம் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் மோடியுடன் அதிபர் புடின் பேச்சு.. இந்தியாவுக்கு ஆதரவு!
சபரிமலை செல்கிறார் குடியரசுத் தலைவர் முர்மு.. ஐயப்பனை தரிசிக்கப்போகும் முதல் ஜனாதிபதி!
செனாப் நதியின் 2 அணைகளிலிருந்து.. பாகிஸ்தான் செல்லும் தண்ணீரை.. நிறுத்தி வைத்தது இந்தியா
Gold rate: தங்கம் விலை ஸ்திரமற்றதாக இருக்கும்.. முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்..!
குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. காயத்தால் அவதிப்படும் பும்ரா.. புது வைஸ் கேப்டனாக வரப் போவது யாரு?
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிறைகளைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம்?.. பாதுகாப்பு அதிகரிப்பு!
வேற லெவல் சாட்ஜிபிடி.. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி.. ஏ+ மார்க் வாங்கி அசத்திய ஆய்வு மாணவர்!
Cheating case: 78 வயது மூதாட்டியிடம் மோசடி.. 21 வயது இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது!