பிரதமர் கூட்டத்தில்.. ஆயிரக்கணக்கான த.மா.கா.வினர் பங்கேற்பார்கள்.. ஜி.கே.வாசன் உற்சாகம்!

Feb 27, 2024,02:55 PM IST

கோயம்புத்தூர்: பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தமாகா தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வந்தார். அந்த நடைப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரமாண்ட நிறைவு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.




இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,  மோடி அவர்களின் பிரமாண்ட  பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் திரளாக என்னை வரவேற்றார்கள். ஆயிரக்கணக்கான  தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்களோடு இணைந்து இன்றைக்கு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 


வருங்கால இந்தியா மிக உயர்ந்த இந்தியாவாக, மதிப்பிற்குரிய இந்தியாவாக, வளமான இந்தியாவாக, வலிமையான இந்தியாவாக பிரதமர் மோடி தலைமையிலே அமையும். அத்தகைய உயர்ந்த நிலைக்கு 10 வருட கால மத்திய அரசினுடைய பிரதமர் மோடி தலைமையிலான  மக்கள் பணிகள், மக்கள் திட்டங்கள், சாதனைகள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. 


தமிழகத்திலிருந்து பாஜக கூட்டணிக்கு பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையை தமிழக வாக்காளர்கள் இந்த முறை உறுதியாக ஏற்படுத்துவார்கள் என நம்புகிறோம். அதற்கு ஏற்றவாறு எங்களது களப்பணி அமையும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்