உடம்பில் ஒட்டுத் துணி இல்லை.. முழு நிர்வாணமாக.. இமயமலையில் சுற்றித் திரிந்த "துப்பாக்கி" நடிகர்!

Dec 10, 2023,05:48 PM IST

மும்பை: முழு நிர்வாண கோலத்தில் இமயமலைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார் பிரபல இந்தி வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இமயமலைக்குப் போவது பலரின் வழக்கமாக உள்ளது. உலகக் கவலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு சற்று நிம்மதியாக இருப்பதற்காக பலரும் அங்கு போகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அடிக்கடி இமயமலைக்குச் செல்வது வழக்கம்.


இந்த நிலையில் இன்னும் ஒரு நடிகர் அடிக்கடி இமயமலைக்குப் போவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் வித்யுத் ஜம்வால். பிரபல நடிகரான இவர் தமிழில் துப்பாக்கி படத்தில் நடித்து அறிமுகமானவர். அதில் தீவிரவாதிகளின் தலைவனாக நடித்திருப்பார் வித்யுத் ஜம்வால். தொடர்ந்து சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இமயமலையில் கிட்டத்தட் ஒரு வார காலம் நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்துள்ளார் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட் வைரலாகியுள்ளது. நிர்வாண கோலத்தில் தான் இருக்கும் புகைப்படங்களையும் வித்யுத் வெளியிட்டுள்ளார். 




இதுதொடர்பாக அவர் கூறுகையில், 


இமயமலையில் எனது ஆத்ம உலா. 14 வருடங்களுக்கு முன்பு இது ஆரம்பித்தது. இதை ஒவ்வொரு ஆண்டும் நான் 7 முதல் 10 நாட்களுக்கு மேற்கொண்டு வருகிறேன்.  எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இது மாறி விட்டது.


சொகுசான வாழ்க்கையிலிருந்து இயற்கையான இந்த வாழ்க்கைக்கு வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நாம் யார் என்பதை நம்மை உணர வைக்கிறது.  தனிமையில் என்னை நானே உணர முடிகிறது. நாம் யார் என்பதை உணர்வதற்கு முன்பு நாம் யார் இல்லை என்பதை உணர வேண்டும். அதை இந்த பயணம் எனக்கு உணர்த்தும்.  இயற்கை தந்த இந்த அருமையான சொர்க்கத்தை அனுபவிக்க இது வாய்ப்பு தருகிறது.


இங்கு வருவது எனக்கு சக்தியைக் கூட்ட உதவுகிறது. இங்கு கிடைக்கும் சக்தியும் வலிமையும் நான் வீடு திரும்பிய பின்னர் எனக்குப் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து ஓட உதவுகிறது. புதிதாக பிறந்தது போல உணர வைக்கிறது. 


எனது அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கவுள்ளது.. அதற்கு நான் தயாராக விட்டேன். எனது கிராக் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது.. நான் மட்டுமல்ல நீங்களும் கண்டு களிக்கத் தயாராகுங்கள்  என்று கூறியுள்ளார் வித்யுத் ஜம்வால்.


அவரது புகைப்படங்களை உள்ளூர்க்காரரான  மொஹர் சிங் என்ற கால்நடை மேய்ப்பாளர் எடுத்துள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்