உடம்பில் ஒட்டுத் துணி இல்லை.. முழு நிர்வாணமாக.. இமயமலையில் சுற்றித் திரிந்த "துப்பாக்கி" நடிகர்!

Dec 10, 2023,05:48 PM IST

மும்பை: முழு நிர்வாண கோலத்தில் இமயமலைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார் பிரபல இந்தி வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இமயமலைக்குப் போவது பலரின் வழக்கமாக உள்ளது. உலகக் கவலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு சற்று நிம்மதியாக இருப்பதற்காக பலரும் அங்கு போகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அடிக்கடி இமயமலைக்குச் செல்வது வழக்கம்.


இந்த நிலையில் இன்னும் ஒரு நடிகர் அடிக்கடி இமயமலைக்குப் போவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் வித்யுத் ஜம்வால். பிரபல நடிகரான இவர் தமிழில் துப்பாக்கி படத்தில் நடித்து அறிமுகமானவர். அதில் தீவிரவாதிகளின் தலைவனாக நடித்திருப்பார் வித்யுத் ஜம்வால். தொடர்ந்து சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இமயமலையில் கிட்டத்தட் ஒரு வார காலம் நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்துள்ளார் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட் வைரலாகியுள்ளது. நிர்வாண கோலத்தில் தான் இருக்கும் புகைப்படங்களையும் வித்யுத் வெளியிட்டுள்ளார். 




இதுதொடர்பாக அவர் கூறுகையில், 


இமயமலையில் எனது ஆத்ம உலா. 14 வருடங்களுக்கு முன்பு இது ஆரம்பித்தது. இதை ஒவ்வொரு ஆண்டும் நான் 7 முதல் 10 நாட்களுக்கு மேற்கொண்டு வருகிறேன்.  எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இது மாறி விட்டது.


சொகுசான வாழ்க்கையிலிருந்து இயற்கையான இந்த வாழ்க்கைக்கு வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நாம் யார் என்பதை நம்மை உணர வைக்கிறது.  தனிமையில் என்னை நானே உணர முடிகிறது. நாம் யார் என்பதை உணர்வதற்கு முன்பு நாம் யார் இல்லை என்பதை உணர வேண்டும். அதை இந்த பயணம் எனக்கு உணர்த்தும்.  இயற்கை தந்த இந்த அருமையான சொர்க்கத்தை அனுபவிக்க இது வாய்ப்பு தருகிறது.


இங்கு வருவது எனக்கு சக்தியைக் கூட்ட உதவுகிறது. இங்கு கிடைக்கும் சக்தியும் வலிமையும் நான் வீடு திரும்பிய பின்னர் எனக்குப் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து ஓட உதவுகிறது. புதிதாக பிறந்தது போல உணர வைக்கிறது. 


எனது அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கவுள்ளது.. அதற்கு நான் தயாராக விட்டேன். எனது கிராக் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது.. நான் மட்டுமல்ல நீங்களும் கண்டு களிக்கத் தயாராகுங்கள்  என்று கூறியுள்ளார் வித்யுத் ஜம்வால்.


அவரது புகைப்படங்களை உள்ளூர்க்காரரான  மொஹர் சிங் என்ற கால்நடை மேய்ப்பாளர் எடுத்துள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

கடலில் விழுந்து மூழ்கிய.. பல கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க போர் விமானம்.. 2 வீரர்கள் மீட்பு!

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

பொறுத்தார் பூமிஆள்வார்.. விடா முயற்சியே வெற்றிக்கு வழிகாட்டி.. கலாம் சொல்வதும் அதுதான்

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை மீண்டும் சற்று உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிருப்தி..!

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!

அதிகம் பார்க்கும் செய்திகள்