உடம்பில் ஒட்டுத் துணி இல்லை.. முழு நிர்வாணமாக.. இமயமலையில் சுற்றித் திரிந்த "துப்பாக்கி" நடிகர்!

Dec 10, 2023,05:48 PM IST

மும்பை: முழு நிர்வாண கோலத்தில் இமயமலைப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார் பிரபல இந்தி வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.


இமயமலைக்குப் போவது பலரின் வழக்கமாக உள்ளது. உலகக் கவலைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு சற்று நிம்மதியாக இருப்பதற்காக பலரும் அங்கு போகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அடிக்கடி இமயமலைக்குச் செல்வது வழக்கம்.


இந்த நிலையில் இன்னும் ஒரு நடிகர் அடிக்கடி இமயமலைக்குப் போவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் வித்யுத் ஜம்வால். பிரபல நடிகரான இவர் தமிழில் துப்பாக்கி படத்தில் நடித்து அறிமுகமானவர். அதில் தீவிரவாதிகளின் தலைவனாக நடித்திருப்பார் வித்யுத் ஜம்வால். தொடர்ந்து சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இமயமலையில் கிட்டத்தட் ஒரு வார காலம் நிர்வாண கோலத்தில் சுற்றித் திரிந்துள்ளார் வித்யுத் ஜம்வால். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட் வைரலாகியுள்ளது. நிர்வாண கோலத்தில் தான் இருக்கும் புகைப்படங்களையும் வித்யுத் வெளியிட்டுள்ளார். 




இதுதொடர்பாக அவர் கூறுகையில், 


இமயமலையில் எனது ஆத்ம உலா. 14 வருடங்களுக்கு முன்பு இது ஆரம்பித்தது. இதை ஒவ்வொரு ஆண்டும் நான் 7 முதல் 10 நாட்களுக்கு மேற்கொண்டு வருகிறேன்.  எனது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இது மாறி விட்டது.


சொகுசான வாழ்க்கையிலிருந்து இயற்கையான இந்த வாழ்க்கைக்கு வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. நாம் யார் என்பதை நம்மை உணர வைக்கிறது.  தனிமையில் என்னை நானே உணர முடிகிறது. நாம் யார் என்பதை உணர்வதற்கு முன்பு நாம் யார் இல்லை என்பதை உணர வேண்டும். அதை இந்த பயணம் எனக்கு உணர்த்தும்.  இயற்கை தந்த இந்த அருமையான சொர்க்கத்தை அனுபவிக்க இது வாய்ப்பு தருகிறது.


இங்கு வருவது எனக்கு சக்தியைக் கூட்ட உதவுகிறது. இங்கு கிடைக்கும் சக்தியும் வலிமையும் நான் வீடு திரும்பிய பின்னர் எனக்குப் புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து ஓட உதவுகிறது. புதிதாக பிறந்தது போல உணர வைக்கிறது. 


எனது அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கவுள்ளது.. அதற்கு நான் தயாராக விட்டேன். எனது கிராக் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திரைக்கு வருகிறது.. நான் மட்டுமல்ல நீங்களும் கண்டு களிக்கத் தயாராகுங்கள்  என்று கூறியுள்ளார் வித்யுத் ஜம்வால்.


அவரது புகைப்படங்களை உள்ளூர்க்காரரான  மொஹர் சிங் என்ற கால்நடை மேய்ப்பாளர் எடுத்துள்ளாராம்.

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!

news

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!

news

சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி

news

மனமாற்றம் வேண்டும்!!

news

போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!

news

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்

news

இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!

news

தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்